பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 791

சொற்ற ஆதரத்தின் வாய்மை
     எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால; பின்பு ஆங்கு
     அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே.

    கொற்றவாள் அரக்கன் - வெற்றி தரும் வாள் ஏந்திய
அரக்கன் (இராவணன்); ஆதரம் - அன்பு, பற்று.                 81-1

8. மாரீசன் வதைப் படலம்

295. ஆயிரம் அடல்
     கையுடையானை மழு வாளால்
'ஏ' எனும் உரைக்குள் உயிர்
     செற்ற எதிர் இல்லோன்
மேய விறல் முற்றும்
     வரி வெஞ் சிலையினோடும்
தாயவன் வலித் தகைமை
     யாம் உறு தகைத்தோ.

    ஆயிரம் அடல் கையுடையான் - ஆயிரம் வெற்றிக் கைகளை
உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் - ஈடு இல்லாதவன் (வாலி);
தாயவன் - கடந்தவன் (இராமன்).                            25-1

9. இராவணன் சூழ்ச்சிப் படலம்

296.ஓவரு கவனம்மீது
     உற்றுச் சென்றுளான்,
பூ வரு சாலையுள்
     பொருந்த நோக்குறா,
'யாவர், இவ் இருக்கையுள்
     இருந்த நீர்?' என்றான் -
தேவரும் இடர் உறத்
     திரிந்த மேனியான்.

    ஓவரு - நீக்குதற்கு அரிய; பூவரு சாலை - மலர்கள் மலரும்
(இலைக்) குடில்; நோக்குறா - பார்த்து.                       24-1

297.'மேனகை, திலோத்தமை,
     முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து,
     அவன் தன் மாட்சியால்,