பக்கம் எண் :

792ஆரணிய காண்டம்

ஊனம் இல் அடைப்பை, கால்
     வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே.

    ஏழையர் - பெண்கள்; அடைப்பை - வெற்றிலைப் பை
(தாங்குதல்).                                             43-1

298.'சந்திரன், இரவி
     என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை
     திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர்,
     ஈண்டு, அவன்
கந்து அடு
     கோயிலின் காவலாளரே.

    தேசு - ஒளி; கந்து அடு கோயில் - கட்டுத்தறிகளை முறிக்கும்
(களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை.                      43-2

299. என்றனள்; அபயம், புட்காள்!
     விலங்குகாள்! இராமன் தேவி,
வென்றி கொள் சனகன் பேதை,
     விதியினால் அரக்கன் தேர்மேல்
தென் திசை சிறைபோகின்றேன்;
     சீதை என் பெயரும் என்றாள்;
சென்று அது சடாயு வேந்தன்
     செவியிடை உற்றது அன்றே.

    புட்காள் - பறவைகளே; பேதை - பெண்.               43-2

10. சடாயு உயிர் நீத்த படலம்

300.'பின்னவன் உரையினை
     மறுத்து, பேதையேன்,
அன்னவன்தனைக் கடிது
     அகற்றினேன்; பொரு
மன்னவன் சிறை அற
     மயங்கினேன்; விதி
இன்னமும் எவ் வினை
     இயற்றுமோ?' எனா,