பின்னவன் - தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் - (இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு). 45-1 301. | சடாயுவைத் தடிந்த வாளைச் சடுதியில் விதிர்க்கக் கண்டாள்; 'தடால்' எனக் கபாடம் சாத்தி, சாலையுள் சலித்தாள் அந்தோ; விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான், குடா மதி கோனைச் சேரும் கோமுகன்-குறளி ஒத்தான். |
கபாடம் - வாயில் (கதவு). 58-1 302. | 'பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம்' என, உள் நிறை கூடமும் உவந்த சாலையும், மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும் விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள். |
303. | முன்னமே பூமியை முகந்து, பாதலம்- தன்னிலே தரித்தன சயமும் தந்திலது என்னவே, மாகம்மீது ஏகினான் செய உன்னியே இராவணன் உவந்ததொத்துஅரோ. |
மாகம் - வானம். 58-3 304. | சடாயுவும் சாய்ந்தனன்; சனகி சாய்ந்தனள்; விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோள் |
|