11. அயோமுகிப் படலம் 308. | என்று அவள் கூறலும், மைந்தனும், 'இன்னே நன்றியதாய நறும் புனல் நாடி, வெனறி கொள் வீரன் விடாய்அது தீர்ப்பான் இன்று இவண் வந்தனன்' என்று உரைசெய்தான். |
நன்றியதாய - நல்லதான; வென்றி கொள்வீரன் - வெற்றி கொள்ளும் வீரன் (இராமன்); விடாய் - தாகம். 55-1 12. கவந்தன் படலம் 309. | 'பாரிடமே இது; பரவை சுற்றுறும் பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது; பார், இடம் வலம் வரப் பரந்த கையது:- பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய்! |
பாரிடம் - பெரிய இடம்; பரவை சுற்றும் பார் - கடல் சூழ்ந்த உலகம்; பாழி - வலிமை. 21-1 310. | காவாய் என்பால், தன் ஐயரான் கைவிட வல்லேன்; வேவா நின்றே நிற்க, 'இவ் வெய்யோற்கு இணை ஆவார் நீ வா, என்ன, அன்னது கண்டும், அயர்கில்லேன்; போவேன் யானே; எவ் உலகோ, என் புகல் அம்மா! |
இவ்வெய்யோற்கு - இந்தக் கொடியவனுக்கு. 29-1 |