2648. | 'வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும், ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர் மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம் போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்' என்றான் |
வேந்தன் வீயவும் - சக்ரவர்த்தியாம் தயரதன் இறப்பவும்; யாய் துயர் மேவவும் - தாயாம் கௌசலை துன்பம்அடையவும்; ஏந்தல் எம்பி வருந்தவும் - பெருமை உடைய என் தம்பி பரதன் வருத்தமடையவும்;என் நகர் மாந்தர் வன்துயர் கூரவும் - எனது (அயோத்தி) நகரத்தில் உள்ள மக்கள்வலிய துன்பத்தைப் பெரிதும் அடையவும்; யான் வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால்என்றான் - நான் காட்டிற்குப் புறப்பட்டு வந்தது என்னுடைய நல்வினையாலாகும் என்றுகூறினான். மகனைப் பிரிந்த துன்பத்தால் தயரதன் இறந்தான். அண்ணனைப் பிரிந்த துன்பத்தால்பரதன் வருந்தினான். அயோத்தி மக்கள் பட்ட துயரத்தை அயோத்தியா காண்டத்தில் நகர் நீங்குபடலம் கூறும் (1766-1817). முனிவர்களின் பகைதீர்த்து உதவி செய்யப் பெறுவதால் 'போந்தது என்னுடைப் புண்ணியத்தால்' என இராமன் கூறினான். யாய் - ஆய் என்பதன் போலி, ஏந்தல் - உயர் குணங்களை ஏந்தியவன், உயர்ச்சி,பெருமையும் ஆம். 18 2649. | 'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை மறந்த புல்லர் வலி தொலையேன் எனின், இறந்துபோகினும் நன்று; இது அல்லது, பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? |
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை - தருமத்திலிருந்து நீங்காத முனிவர்களின் பெருமையை; மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் -மறந்து (உங்களுக்குக்) கேடு செய்கின்ற அற்பர்களாகிய அரக்கர்களின் பலத்தை அழிக்காமற்போவேன் ஆனால்; இறந்து போகினும் நன்று - அவ்வரக்கர்களால் போரில்மரணமடைந்தாலும் நல்லதே; இது அல்லது - இந்த நல்ல செயலுக்குப் பயன்படுதல் அல்லாமல்;யான் பிறந்து பெறும் |