| 2528. | பம்பு செக்கர், எரி, ஒக்கும் மயிர் பக்கம் எரிய, கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து, ஒளிகுலாம் உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை, எயிறு ஒண் கிம்புரிப் பெரிய தோள் வளையொடும், கிளரவே |
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் - பரவிய செவ்வானத்தையும் தீயையும் போன்ற செம்மயிர்; பக்கம் எரிய - பக்கங்களில்விளங்க, கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து - குடம் போன்ற மத்தகங்கள்உயர்ந்த நெற்றியில் கட்டப் பெற்ற; ஒளி குலாம் உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை -ஒளி வீசும் தேவர்கட்கு அரசனான இந்திரனின் பெரிய ஐராவதம் எனும் யானையின் நெற்றிப்பட்டம்; எயிறு ஒண் - அந்த யானையின் தந்தங்களில் பூட்டிய ஒளி மிக்க; கிம் புரி- பூண்கள்; பெரிய தோள் வளையொடும் - பெரிய வாகுவலயத்துடன்; கிளர - விளங்க; ஏ - ஈற்றசை. செம்பட்டை மயிர் உடற்புறத்தே தொங்கிய விராதனுக்கு ஐராவதத்தின் ஓடை நெற்றிப்பட்டமாகவும், கிம்புரி வாகுவலயமும் ஆயின, பம்புதல் - பரத்தல், உற்ற - உவமஉருபு. 12 | 2529. | தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ, பொங்கு வெங் கொடுமை என்பது புழுங்கி எழ, மா மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக் கங்குல், பூசி வருகின்ற கலி காலம் எனவே |
தங்கு திண் கரிய காளிமை - பொருந்திய வலிய மிகுந்த கறுப்பு; தழைந்து தவழ - செழித்து விளங்க, பொங்குவெங்கொடுமை என்பது - மேற்கிளம்பும் பெரும் கொடுமை எனும் தீயபண்பு; புழுங்கி எழ -கோபித்து மேற்கிளம்ப; மங்கு மா பாதகம் - மிகக்கேட்டை உண்டாக்கும் பெரும்பாவமும்; விடம் கனல் - நஞ்சும் நெருப்பும்; வயங்கு திமிர - விளங்கிச்செருக்கிய; கங்குல் பூசி வருகின்ற - இருளைப் பூசிக்கொண்டு வரும்; கலிகாலம் என -கலிகாலம் (எதிரே உருவெடுத்து வந்தாற்) போல; ஏ - ஈற்றசை. |