பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்105

களால்- அந்தக் கைகளால்;உடல் கடைந்தனன் - (சுக்கிரீவனது) உடலைத்
தாக்கிக் கலக்கினான் (வாலி);இவன் உலைந்தனன் -சுக்கிரீவன் பெரிதும்
வருந்தினான்.

     வாலியின் சினத்திற்குக் குரக்கினம் முழுவதும் குடல் கலங்கி அஞ்சி
நடுங்கின.  பாற்கடலைக் கடைந்த வாலியின் கைகளுக்குச் சுக்கிரீவன்
உடம்பைக் கலக்குதல் எளிது.  ஆதலின் 'கடல் கடைந்த அக்கரதலங்களால்
உடல் கடைந்தனன்' என்றான்.  உடல் கடைதல் - உடம்பைத் தாக்கி
உறுப்புகள் கலங்குமாறு செய்தல்.  கொடுமையான வார்த்தைகளைப்
பேசியதோடு வாலி சுக்கிரீவனைத் தாக்கவும் செய்தான் என அவன்
கொடுமையை இராமனுக்கு அனுமன் உணருமாறு கூறினான்.  உடல் கடைதல்;
இதன்கண் அமைந்த (வினைப்) படிமம்கருதத்தக்கது.               64

3850.'பற்றி, அஞ்சலன் பழியை - வெஞ் சினம்
முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால்,
எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து,
அற்றம் ஒன்று பெற்ற, இவன், அகன்றனன்.

     பற்றி -வாலி சுக்கிரீவனைப் பிடித்துக் கொண்டு;பழியை அஞ்சலன் -
(தம்பியை வருத்துவதால் ஏற்படும்) பழிக்க அஞ்சாதவனாய்;வெஞ்சினம்
முற்றிநின்ற -
கொடிய கோபம் மிக்கு நின்ற;தன் முரண் வலிக்கையால் -
தனது மிக்க வலிமையுடைய கையால்;எற்றுவான் -மோதுவதற்கு;எடுத்து
எழுதலும் -
உயரத் தூக்கி எழுந்த அளவில்;அற்றம் ஒன்று பெற்று -
அவன் சோர்ந்திருக்கும் சமயம் ஒன்று பெற்று;இவன் பிழைத்து -இந்தச்
சுக்கிரீவன் தப்பிப்பிழைத்து;அகன்றனன் -அவ்விடம் விட்டு அகன்று
ஓடினான்.

     வாலி, தன்னைப் பழிப்பரே என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன் தம்பியை
மோதிக் கொல்ல, உயரே எடுத்த அளவில் சுக்கிரீவன் வாலி சிறிது
அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தப்பி ஓடி வந்துவிட்டான் என்பதாம்.  முரண்
வலி - ஒரு பொருட்பன்மொழி.  மிக்க வலிமை.  சுக்கிரீவனின் அச்சத்தைப்
பிழைத்தால் போதுமென ஒடி அகன்ற நிலை உணர்த்தும்.  பழிக்கு அஞ்சாத
வாலியின் கொடுமை உணர்த்தப்பட்டது.                            65

வாலிக்கு அஞ்சிய, சுக்கிரீவன் இரலை மலையில் வாழ்தல்

 

3851.'எந்தை! மற்று அவன்
     எயிறு அதுக்குமேல்,
அந்தகற்கும் ஓர்
     அரணம் இல்லையால்;
இந்த வெற்பின் வந்து
     இவன் இருந்தனன் -
முந்தை உற்றது ஓர்
     சாபம் உண்மையால்.