பக்கம் எண் :

கலன்காண் படலம் 165

வேண்டும்;ஒரு முறையே -(அதனால்) ஒரே சமயத்தில்;உலகம் யாவை
யும் பரவி -
எல்லா உலகங்களுக்கும் சென்று பரவி;திருஉறை -சீதை
தங்கியிருக்கின்ற;வேறு இடம் -வேறிடத்தை;தேர வேண்டும் -தேடி
அறிய வேண்டும்.

     அரக்கர்கள் கணப்போதில் பல உலகங்களுக்குச் சென்று திரும்புவர்
ஆதலின், ஒரு புறத்தே சென்று சீதையைத் தேடுகையில் அவர்கள் வேறுபுறம்
கொண்டு மறைப்பார்.  ஒவ்வோர் இடமாய்த் தேடிச் செல்ல உலகமும் பெரிது;
தேடுதற்கு ஆண்டுகள் பலவாகும்.  எனவே,  ஒரே நேரத்தில் உலகெங்கும்
பிரிந்து சென்று தேடுதல் வேண்டும் என்று அனுமன் உரைத்தான்.

     திரு என்றது சீதாபிராட்டியை; வரன்முறை - வரிசைப்படி; யாவையும் -
முற்றும்மை.                                                  32

3933.'ஏழு பத்து ஆகிய
      வெள்ளத்து எம் படை,
ஊழியில் கடல் என
     உலகம் போர்க்குமால்;
ஆழியைக் குடிப்பினும், அயன்
      செய் அண்டத்தைக்
கீழ் மடுத்து எடுப்பினும்,
      கிடைத்த செய்யுமால்.

     ஏழு பத்து ஆகிய வெள்ளத்து-எழுபது வெள்ளம் என்ற அளவினை
உடைய;எம்படை -எங்கள் வானரப் படை;ஊழியில் கடல் என -யுக
முடிவுக் காலத்தில் பொங்கி எழும் கடல் போல;உலகம் போர்க்கும் -
உலகம் முழுவதும் பரவி மூடவல்லது;ஆழியைக் குடிப்பினும் -(மற்றும்அது)
கடலைக் குடிக்க வேண்டுமென்றாலும்;அயன் செய் அண்டத்தை -
நான்முகனால் படைக்கப் பெற்ற பிரமாண்டத்தை;கீழ் மடுத்து எடுப்பினும் -
கீழே கையைச் செலுத்திப் பெயர்த்து எடுக்க வேண்டுமென்றாலும்;கிடைத்த
செய்யும் -
இட்ட கட்டளையை ஏற்றுச் செய்யும்.

     வானரப்படையின் மிகுதியும், ஆற்றலும் கட்டுப்பாடும் இப்பாடலில்
உணர்த்தப்பட்டன.

     வெள்ளம் - ஒரு பேரெண். இவ்வெண்ணிக்கை முன்னரும் 'வெள்ளம்
ஏழு பத்து உள்ள' (3831) என அனுமனால் குறிக்கப்பட்டது.  வானரப்
படைகள் எதையும் செய்யவல்லன என அனுமன் உரைப்பது 'மலை
அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே, வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவனே'
எனும் (பட்டினப் 271 - 273) கரிகாலன் வீரச்செயலோடு ஒப்பிடத்தக்கது.   33

வாலி இருக்கும் இடத்திற்குச் செல்லுதல்

3934.'ஆதலால், அன்னதே அமைவது
      ஆம் என,