பக்கம் எண் :

224கிட்கிந்தா காண்டம்

 முள்கிடும் குழியில் புக்க மூரி
      வெங் களி நல் யானை
தொள்கொடும் கிடந்தது என்ன, துயர்
      உழந்து அழிந்து சோர்வான்.

     வெள்கிடும் -(வாலிதன் நிலையை எண்ணி) நாணம் கொள்வான்;
மகுடம் சாய்க்கும் -
(நாணத்தால்) கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்;
வெடிபடச் சிரிக்கும் -
வெடிப்பதுண்டது போல சிரிப்பான்;மீட்டும்
உள்கிடும் -
நடந்ததைக் குறித்து மீண்டும் சிந்திப்பான்;இதுவும்  நான் ஓர்
ஓங்கு அறமோ -
'இப்படி அம்பு செலுத்துதலும் ஒரு சிறந்த தருமமாகுமோ?'
என்று உன்னும் -என்று எண்ணுவான்.  முள்கிடும் குழியில் -முழுகி
அழுந்தத் தக்க படுகுழியில்;புக்க மூரி வெங் களி நல் யானை -(வீழ்ந்து)
அகப்பட்டு கொண்ட வலிய கொடிய மதங் கொண்ட சிறந்த யானை;
தொள்கொடும் கிடந்தது என்ன -
சேற்றுடன் கிடந்தது போல;துயர்
உழந்து அழிந்து சோர்வான் -
துன்புற்று தன் வலிமை அழிந்து தளர்ச்சி
அடைவான்.

     வீழ்ந்த வாலியின் மனநிலையைப் பாடல் புலப்படுத்தும்.  இராமன்
அறத்தின் வடிவம் என்று வாலி எண்ணியதால் 'இப்படி அம்பு செலுத்துவதும்
ஒரு சிறந்த அறமாகுமா?' என எண்ணி மயங்கினான்.  முள்கிடுங்குழி -
பெரும் பள்ளம், படுகுழி.  யானை பிடிப்போர், பள்ளம் தோண்டிப் பழக்கிய
பெண் யானையை ஒருபுறம் நிறுத்தி வைக்க, ஆண் யானை, பிடியைச் சேரும்
ஆர்வத்தில் விரைந்து வந்து குழியி்ல் விழ; அதனைப்பிணித்து மேலேற்றிச்
செல்வர்.  அவ்வாறு இராமன் செய்த தந்திரத்தால் வாலி அகப்பட்டு
வருத்தலாயினன்.  உவமை அணி.  தொள்கு - சேறு; வலை எனலுமாம்.  முன்
பாடலில் புன்சிரிப்புச் (நகை வர) சிரித்தவன் இங்கு வெடிபடச் சிரித்தான்
என்றது காண்க.                                                81

இராமன் வாலியின் எதிர்வந்து தோன்றலும்
அவனை வாலி இகழ்தலும்

4016.'இறை திறம்பினனால்; என்னே,
      இழிந்துளோர் இயற்கை! என்னின்,
முறை திறம்பினனால்' என்று
      மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை
      மன்னர்க்கு முன்னம் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத்
      தோன்றினான், வந்து தோன்ற,

     இறை திறம்பினனால் - தலைமைத் தன்மை உடைய இராமன் முறை
தவறினன் என்றால்;இழிந்துளோர் இயற்கை என்னே -(இனி)
இழிந்தோராகிய சிறியார் இயல்பு என்னாகும்?என்னின் முறை திறம்
பின்னால் -
அதுவும் என் திறத்தின் நீதிமுறை தவறினானே!என்று