கொடிவள்ளாய் -வள்ளைக் கொடியே!மலர்க்கொம்பு அனைய - பூங்கொம்பைப் போன்ற;மடச் சீதை -மடமைக் குணம் பொருந்திய சீதையின்;காதே -காதே ஆவாய்;மற்று ஒன்று அல்லை ஆல் - பிறிதொன்றில்லை; ஆதலால்; அலக்கண் உற்றேற்கு -(சீதையைப் பிரிந்து) துன்புறும் எனக்கு;உற்று உதவற்கு - நெருங்கிய உதவுதற்கு;அடைவு உண்டு அன்றோ- இயைபு உண்டு அல்லவா? பொலக்குண்டலமும் - (அங்ஙனமிருக்கவும்) பொன்னால்செய்த குண்டலத்தையும்;கொடுங்குழையும்- வளைந்த காதணியையும்;புனை தாழ்முத்தின் பொன்தோடும் -அழகிய தொங்குகின்ற முத்துக்களை உடைய பொன்தோட்டினையும்;விலக்கி வந்தாய் - நீக்கி வந்தாய்;காட்டாயோ?- (அவற்றை அணிந்து) காட்டமாட்டாயா?; இன்னும் பூசல் விரும்புதியோ -மேலும் பகையினை விரும்புவாயோ? 'நீ வடிவத்தால் சீதையின் காதை ஒத்திருப்பதால் குண்டலம், குழை, தோடு ஆகியவற்றை அணிந்திருப்பின், நான் உன்னைக் கண்டு ஒருவாறு ஆறுதல் அடைந்திருப்பேன். நீ அவற்றை நீக்கி வந்தாய்; காதுகளால் சீதை உனது அழகை அழித்தாள் என்ற பழம் பகைமைகொண்டு துன்புற்று வருந்தும் எனக்கு உதவாமல் இருப்பது விரும்பத்தக்கதன்று' என்று இராமன் வள்ளைக்கொடியொடு வருந்தினான். அலக்கண் - துன்பம்; சீதையின் பிரிவால் ஏற்பட்டது; மலர்க்கொம்பு - கொம்பு மேனிக்கும், மலர் - கண், கை, கால், முகம் முதலிய உறுப்புக்களுக்கும் உவமை; மடமை - எல்லாம் அறிந்தும் அறியாதது போலிருக்கும் தன்மை; குண்டலம், குழை, தோடு என்பன மகளிர் காதணிகள். குழை - தளிர் வடிவமான காதணி. தொங்கட்டான்என்பர். 30 | 3739. | 'பஞ்சு பூத்த விரல், பதுமம் பவளம் பூத்த அடியாள், என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த மஞ்சு பூத்த மழைய அனைய குழலாள், கண்போல் மணிக் குவளாய்! நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ?' |
பஞ்சு பூத்த விரல்- செம்பஞ்சுக்குழம்பு ஊட்டிய விரல்களால்;பதுமம் பவளம் பூத்த- செந்தாமரை மலரில் பவளம் பொருந்தியது போன்ற; அடியாள் -அடிகளை உடையவளும்;என் நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்- என் மனமென்னும் மலர்ந்த தாமரை மலராகிய நிலையத்தில்; பூத்தாள் - (எப்பொழுதும்)விளங்குபவளும்;நிறம் பூத்த - கருநிறத்தால் சிறந்து விளங்கும்;மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் -அழகுமிக்க மேகம் போன்ற கூந்தலை உடையவளுமான சீதையின்;கண்போல் - கண்களைப்போன்று விளங்கும்;மணிக்குவளாய் -அழகிய குவளை மலரே! நஞ்சு பூத்ததாம் அன்ன - நஞ்சு |