பக்கம் எண் :

பம்பை வாவிப் படலம்25

     கொடிவள்ளாய் -வள்ளைக் கொடியே!மலர்க்கொம்பு அனைய -
பூங்கொம்பைப் போன்ற;மடச் சீதை -மடமைக் குணம் பொருந்திய
சீதையின்;காதே -காதே ஆவாய்;மற்று ஒன்று அல்லை ஆல் -
பிறிதொன்றில்லை; ஆதலால்; அலக்கண் உற்றேற்கு -(சீதையைப் பிரிந்து)
துன்புறும் எனக்கு;உற்று உதவற்கு - நெருங்கிய உதவுதற்கு;அடைவு
உண்டு அன்றோ
- இயைபு உண்டு அல்லவா? பொலக்குண்டலமும் -
(அங்ஙனமிருக்கவும்) பொன்னால்செய்த குண்டலத்தையும்;கொடுங்குழையும்-
வளைந்த காதணியையும்;புனை தாழ்முத்தின் பொன்தோடும் -அழகிய
தொங்குகின்ற முத்துக்களை உடைய பொன்தோட்டினையும்;விலக்கி வந்தாய்
-
நீக்கி வந்தாய்;காட்டாயோ?- (அவற்றை அணிந்து) காட்டமாட்டாயா?;
இன்னும் பூசல் விரும்புதியோ -
மேலும் பகையினை விரும்புவாயோ?

     'நீ வடிவத்தால் சீதையின் காதை ஒத்திருப்பதால் குண்டலம், குழை,
தோடு ஆகியவற்றை அணிந்திருப்பின், நான் உன்னைக் கண்டு ஒருவாறு
ஆறுதல் அடைந்திருப்பேன்.  நீ அவற்றை நீக்கி வந்தாய்; காதுகளால் சீதை
உனது அழகை அழித்தாள் என்ற பழம் பகைமைகொண்டு துன்புற்று வருந்தும்
எனக்கு உதவாமல் இருப்பது விரும்பத்தக்கதன்று' என்று இராமன்
வள்ளைக்கொடியொடு வருந்தினான்.

     அலக்கண் - துன்பம்; சீதையின் பிரிவால் ஏற்பட்டது; மலர்க்கொம்பு -
கொம்பு மேனிக்கும், மலர் - கண், கை, கால், முகம் முதலிய
உறுப்புக்களுக்கும் உவமை; மடமை - எல்லாம் அறிந்தும் அறியாதது
போலிருக்கும் தன்மை; குண்டலம், குழை, தோடு என்பன மகளிர் காதணிகள்.
குழை - தளிர் வடிவமான காதணி.  தொங்கட்டான்என்பர்.            30

3739.'பஞ்சு பூத்த விரல், பதுமம்
     பவளம் பூத்த அடியாள், என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம்
     பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மழைய அனைய குழலாள்,
     கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால்
     என்னை நலிவாயோ?'

     பஞ்சு பூத்த விரல்- செம்பஞ்சுக்குழம்பு ஊட்டிய விரல்களால்;பதுமம்
பவளம் பூத்த
- செந்தாமரை மலரில் பவளம் பொருந்தியது போன்ற;
அடியாள் -
அடிகளை உடையவளும்;என் நெஞ்சு பூத்த தாமரையின்
நிலையம்
- என் மனமென்னும் மலர்ந்த தாமரை மலராகிய நிலையத்தில்;
பூத்தாள் -
(எப்பொழுதும்)விளங்குபவளும்;நிறம் பூத்த - கருநிறத்தால்
சிறந்து விளங்கும்;மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் -அழகுமிக்க
மேகம் போன்ற கூந்தலை உடையவளுமான சீதையின்;கண்போல் -
கண்களைப்போன்று விளங்கும்;மணிக்குவளாய் -அழகிய குவளை மலரே!
நஞ்சு பூத்ததாம் அன்ன -
நஞ்சு