பக்கம் எண் :

30கிட்கிந்தா காண்டம்

 சந்த வார் கொங்கயாள்
     தனிமைதான் நாயகன்
சிந்தியா, நொந்து தேய் பொழுது,
     தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான், எரி
     கதிரினான் என.

     அந்தியாள் -அந்திப்பொழுதாகிய பெண்;வந்துதான் அணுகவே -
வந்து சேரவே;அவ் வயின் - அப்போது;சந்தவார் கொங்கையாள் -
அழகிய கச்சணிந்த தனங்களை உடைய சீதை;தனிமைதான்- பிரிந்து
தனியே இருக்கும் நிலையினை;நாயகன் சிந்தியா - இராமன் நினைத்து;
நொந்து தேய்பொழுது
- மனம்வருந்தி வாடும் போது;தெறுசீத நீர் இந்து-
வருததுகின்ற குளிர்ந்த தன்மையை உடைய சந்திரன்;எரி கதிரினான் என-
வெய்ய கதிர்களை உடைய சூரியன் போல;வான் உந்துவான் -வானத்தில்
எழுவானாயினான்.

     அந்தியாள் - மாலைக்காலமாகிய பெண்;

     'அந்தியென்னும் பசலை மெய்யாட்டி' என்பது மணிமேகலை. (5-140).
பிரிந்தார்க்குக் குளிர்ந்த பொருள்களுக்கு வெப்பம் தருமாதலின் சந்திரனும்
சூரியன்போல வெப்பமுண்டாகத் தோன்றினான் என்றார்.  'காலை அரும்பிப்
பகலெல்லாம் போதாகி மாலைமலரும் இந்நோய்' (குறள் 1227) என்றபடி
மாலையில் ஆசை மிகுதியால் இராமனுக்குத் தனிமைத்துன்பம் அதிகமாயிற்று.
என - உவம உருபு.                                           38

3747.பூஒடுங்கின; விரவு புள்
     ஒடுங்கின, பொழில்கள்;
மா ஒடுங்கின; மரனும் இலை
     ஒடுங்கின; கிளிகள்
நா ஒடுங்கின; மயில்கள் நடம்
     ஒடுங்கின; குயில்கள்
கூ ஒடுங்கின; பிளிறு குரல்
     ஒடுங்கின, களிறு.

     பூ ஒடுங்கின -(இரவு வருதலும்) மலர்கள் குவிந்தன;பொழில்கள் -
சோலைகளில்;விரவுபுள் ஒடுங்கின -வந்து கலந்த பறவைகள் தத்தம்
இடங்களில் போய் அடங்கின;மா ஒடுங்கின -விலங்குகள் தம் செயல்
அடங்கின;மரனும் இலை ஒடுங்கின -மரங்களும் இலைகள் குவியப்
பெற்றன;கிளிகள் நா ஒடுங்கின-கிளிகள் பேசுதல் இன்றி அடங்கின;
மயில்கள் நா ஒடுங்கின -
மயில்கள் ஆடுதல் ஒழிந்தன;குயில்கள் கூ
ஓடுங்கின
- குயில்கள் இனிமையாகக் கூவுதலை நிறுத்தின;களிறு பிளிறு
குரல் ஒடுங்கின
- யானைகள் பிளிறுதலாகிய பேரொலி அடங்கின.