பக்கம் எண் :

300கிட்கிந்தா காண்டம்

 இப்போதே கொணர், இன்ன செய் வினைக்கு
ஒப்பு ஆம் யாவையும், என்று உணர்த்தலும்,

     அருள் நின்ற அண்ணலும் -இராமன் கட்டளைப்படி நடக்கும்
பெருமையில் சிறந்த இலக்குவனும்;அப்போதே -அப்பொழுதே;
மெய்ப்போர் மாருதி தன்னை -
அறநெறி தவறாமல் போரைச் செய்ய வல்ல
அனுமனைப் பார்த்து;'வீர நீ - வீரனே! நீ;இன்ன செய் வினைக்கு -இந்த
(முடிசூட்டு விழாச்) செயலுக்கு;ஒப்பு ஆம் யாவையும் -வேண்டிய எல்லாப்
பொருள்களையும்;இப்போதே கொணர் -இப்பொழுதே கொண்டு வந்து
சேர்ப்பாய்';என்று உணர்த்தலும் -என்று கூறியவுடன் . . . .

     அருள் நின்ற -இராமனது அருள்மொழியாகிய ஆணை வழி நின்ற
என்க.  இதுவும் அடுத்த செய்யுளும குளகம்; 4119 ஆம் செய்யுளில் உள்ள
'சூட்டினான்' என்ற வினை கொண்டு முடியும்                           3

4118. மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்,
எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்,
நண்ணும் வேலையில், நம்பி தம்பியும்,
திண்ணம் செய்வன செய்து, செம்மலை,

     மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் -(சுக்கிரீவனை) நீராட்டுவதற்கு
வேண்டிய புண்ணிய தீர்த்தம் முதலான மங்கலப் பொருள்களும்;எண்ணும்
பொன்முடி ஆதி யாவையும் -
எல்லோராலும் நன்கு மதிக்கப்படும்
பொன்னால் செய்த மணிமுடி முதலிய எல்லாப் பொருள்களும்;நண்ணும்
வேலையில் -
வந்த சேர்ந்த அளவில்;நம்பி தம்பியும் -சிறந்தவனான
இராமனின் தம்பி இலக்குவனும்;செம்மலை -பெருமையுடைய சுக்கிரீவனுக்கு;
திண்ணம் செய்வன செய்து -
(முடிசூட்டும் முன்) தவறாது செய்யவேண்டிய
செயல்களைச் செய்து....

     மண்ணும் நீர் முதல் மங்கலம் - மங்கல நீராடலுக்கு வேண்டிய நீர்
முதலியன.  செம்மலை - உருபு மயக்கம்.                            4

4119.மறையோர் ஆசி வழங்க, வானுளோர்
நறை தோய் நாள்மலர் தூவ, நல் நெறிக்கு
இறையோன்தன் இளையோன், அவ் ஏந்தலை,
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான்.

     மறையோர் ஆசி வழங்க -வேதம் அறிந்த அந்தணர்கள் வாழ்த்துக்
கூற;வானுளோர் -தேவலோகத்திலுள்ள தேவர்கள்;நறைதோய் நாள்மலர்
தூவ -
தேன் நிறைந்த அன்றலர்ந்த மலர்களைத் தூவ;நல் நெறிக்கு
இறையோன் தன் -
சிறந்த ஒழுக்கத்திற்குத் தலைவனான இராமனுடைய;
இளையோன் -
தம்பியான இலக்குவன்;அவ் ஏந்தலை -