| வேண்டுவ மரபின் எண்ணி, விதி முறை இயற்றி, வீர! பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில் மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி, நல் திருவின் வைகி. |
'வீர -வீரனே!நீ ஈண்டு நின்று ஏகி -நீ இவ்விடத்திலிருந்து சென்று; நின் இயல்பு அமை இருக்கை எய்தி -உனக்கு இயல்பாக (உரியதாகப்) பொருந்தி இருப்பிடத்தை அடைந்து;வேண்டுவ மரபின் எண்ணி -புரிய வேண்டிய செயல்களை முறைப்பட ஆராய்ந்து;விதிமுறை இயற்றி - நூல்களில் விதிப்பட்ட நெறிப்படி செய்து;பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற -(நீ) ஏற்றுக் கொண்ட பெரிய அரசாட்சிக்குத் தக்க;யாவையும் புரிந்து -எல்லாச் செயல்களையும் செய்து;போரில் மாண்டவன் மைந்தனோடும் - போர்க்களத்தில் இறந்துபட்ட வாலியின் மகன் அங்கதனோடும்;நல் திருவின் வைகி -சிறந்த செல்வ வாழ்க்கையில் நிலைபெற்று;வாழ்தி -வாழ்வாயாக. நல்லமைச்சர்களோடு நன்கு ஆய்ந்து செயல்களை முறைப்படவும் திறம்படிவும் செய்ய வேண்டியிருப்பதால் 'வேண்டுவ மரபின் எண்ணி' விதிமுறை இயற்றி' என்றான். 'மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி' என்றதால் அரசியலில் அங்கதனுக்குச் சுக்கிரீவன் இளவரசுப் பட்டம் கட்டவேண்டும் என்பதை இராமன் குறிப்பாக உணர்த்தினான் எனலாம். 7 4122. | 'வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும், தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும், தூய்மை சால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி, சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி. |
வாய்மை சால் அறிவின் வாய்த்த -வாய்மை நிறைந்த அறிவுத் திறம் வாய்க்கப்பெற்ற;மந்திர மாந்தரோடும் -அமைச்சர் முதலிய அரசியல் அறிஞர்களோடும்;தீமைதீர் ஒழுக்கின் வந்த -குற்றமற்ற நல்லொழுக்க நெறியில் ஒழுகும்;திறத்தொழில் மறவரோடும் -வலி மைக்கேற்ற தொழில்களையுடை வீரர்களோடும்;தூய்மை சால் புணர்ச்சி பேணி - தூய்மை பொருந்திய சேர்க்கையை (அவர்கள் பால்) விரும்பிச் செய்து;துகள் அறு தொழிலை ஆகி -குற்றமற்ற செயல்களைச் செய்பவனாகி; சேய்மையோடு அணிமை இன்றி -பிறரோடு |