பக்கம் எண் :

அரசியற் படலம் 311

சபைகள் பொருந்திய தேவர் உலகத்துக்கே;அரசு எனல் ஆகும்
அன்றே -
தலைமை கொண்டு மேம்பட்டதென்று கூறத்தக்க  தல்லவா? நீ -
(அதனால்) நீ;மனத்தின் எம்மை இரங்கிய பணி -உன் மனத்தில் எங்கள்
பால் இரக்கங் கொண்டு கட்டளையிடும் வேலைகளை;யாம் செய்ய -
நாங்கள் செய்ய;சில நாள் எம்பால் இருத்தி -சில நாட்கள் எம்முடன்
இருப்பாயாக.

     அரங்கு - சுதர்மை முதலிய தெய்வ சபைகள்.  நில, நீர்வளம் பெற்று
வாழ்வதற்கு உரிய வசதிகள் கொண்ட இடமாதலின் 'மரம்கிளர் அருவிக்
குன்றம்' எனப்பட்டது.  வள்ளல் - அண்மை விளி; இழந்த மனைவியையும்
அரசினையும் தனக்கு அளித்தது கருதிக் கூறியது. கிட்கிந்தையைக் குரங்குகள்
வாழும் இடம் என ஒரு குறை கூறலாமேயன்றி அது சுவர்க்கத்தினும்
மேம்பட்டது என்பதால் இராமனை அவ்விடம் தங்குமாறு சுக்கிரீவன்
வேண்டினான் என்க.                                            18

4133.'அரிந்தம! நின்னை அண்மி,
     அருளுக்கும் உரியேம் ஆகி,
பிரிந்து, வேறு எய்தும் செல்வம்
      வெறுமையின் பிறிது அன்றாமால்;
கருந் தடங் கண்ணினாளை
      நாடல் ஆம் காலம்காறும்
இருந்து, அருள் தருதி, எம்மோடு'
      என்று, அடி இணையின் வீழ்ந்தான்.

     அரிந்தம -பகைவர்களை அழிப்பவனே! நின்னை அண்மி -
(நாங்கள்) உன்னைப் புகலடைந்து;அருளுக்கும் உரியேம் ஆகி -(உனது)
கருணைக்கும் உரியவர்களாயிருந்து;பிரிந்து -(பின்) உன்னை விட்டுப்
பிரிந்து;வேறு எய்தும் செல்வம் -தனியே அனுபவிக்கின்ற செல்வம்;
வெறுமையின் பிறிது அன்று ஆம் -
வறுமையினும் வேறான தன்று;
கருந்தடங் கண்ணினாளை -
(ஆதலால்) கரிய பெரிய கண்களை உடைய
பிராட்டியை;நாடல் ஆம் காலம் காறும் -தேடுதற்கு ஏற்ற காலம்
வருமளவும்;எம்மோடு இருந்து அருள் தருதி -(கிட்கிந்தையில்)
எங்களோடு இருந்து அருள்புரிவாய்;என்று -என்று கூறி;அடி இணையின்
வீழ்ந்தான்
- இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

     வாலியைக் கொன்ற திறம் பற்றி 'அரிந்தம' என அழைத்தான்.
இராமனைச் சேர்ந்து பெறும் இன்பத்தை நோக்க, தனியே வேறாகப் பெறும்
செல்வம் பெற்றும் பெறாதது போலாகும் என்றான்.                    19

4134. ஏந்தலும், இதனைக் கேளா, இன்
      இள முறுவல் நாற,
'வேந்து அமை இருக்கை, எம்போல்
      விரதியர் விழைதற்கு ஒவ்வா;