பக்கம் எண் :

312கிட்கிந்தா காண்டம்

 போந்து அவண் இருப்பின், எம்மைப்
      போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து, இனிது இயற்றும் உன்தன்
      அரசியல் தருமம் தீர்தி.

     ஏந்தலும் - பெருமையில்  சிறந்த இராமனும்;இதனைக் கேளா -
(சுக்கிரீவன் கூறிய) இவ்வுரையைக் கேட்டு;இன்இள முறுவல் நாற -இனிய
புன்னகை தோன்ற;வேந்து அமை இருக்கை -அரசர்க்குரிய
அரண்மனையில் தங்கியிருக்கும்;எம்போல் விரதியர் -எம்மைப் போல்
விரதம் பூண்டோர்;விழைதற்கு ஒவ்வா -விரும்பியிருத்தற்குத் தகாததாகும்;
அவண் போந்து இருப்பின் -
(மேலும்) அவ்விடத்தில் (கிட்கிந்தா
நகரத்தினுள்) வந்து வசித்தால்;எம்மைப் போற்றவே பொழுது போம் -
எம்மை உபசரிப்பதிலேயே (உனக்குப்) பொழுது கழிந்திடும்;தேர்ந்து இனிது
இயற்றும் -
ஆராய்ந்து இனிது நடத்தும்;உன்தன் அர சியல் தருமம் -
உன் அரசாட்சியின் முறைமையினின்றும்;தீர்தி -தவறியவனாவாய்.

     விரதியர்  - தவ வாழ்வினர்.  'தாழிரும் சடைகள் தாங்கித் தாங்க அரும்
தவம் மேற்கொண்டு' கானகத்தில் வாழவேண்டும் என்பது கைகேயி சொன்ன
(1601); அது பழுதாகாமல் தவ வாழ்வினராக இருந்தனர் இராமனும் இளவலும்.

     முறுவல் - அன்பு பற்றி எழுந்தது. கேளா - செய்யா என்னும்
வாய்பாட்டு வினையெச்சம் உடன்பாட்டுப் பொருளில் வந்தது. நாற - தோன்ற;
                                                           20

4135. 'ஏழ் - இரண்டு ஆண்டு,  யான் போந்து
      எரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும் வள
      நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடந் தோள்
      வீர! பார்த்திலைபோலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,
      யான் உறும் இன்பம் என்னோ?

     வாழியாய் -வாழ்வை உடையவனே!ஏழ் இரண்டு ஆண்டு -
பதினான்கு வருட காலம்;யான் போந்து எரி வனத்து இருக்க -நான்
சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக;ஏன்றேன் -ஏற்றுக்
கொண்டேன்;அரசர் வைகும் வளநகர் -அரசர்கள் வாழும் செல்வ வளம்
வாய்ந்த நகரில்;வைகல் ஒல்லேன் -தங்குவதற்கு உடன்படேன்.  பாழி
அம் தடந்தோள் வீர -
(மேலும்) வலிமை வாய்ந்த அழகிய பெரிய
புயங்களை உடைய வீரனே!யாழ் இசை மொழியோடு அன்றி -யாழின்
இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல்;யான் உறும் இன்பம்
என்னோ -
நான் அடையும் இன்பம் யாதோ?