பக்கம் எண் :

அரசியற் படலம் 313

பார்த்திலை போலும் -(நீ இதனை) எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்!

     வாலி இறந்தபிறகு, கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடிசூட்ட
வேண்டும் என வேண்டியவன் அனுமன் என்கிறது வான்மீகம்; சுக்கிரீவன்
அழைப்பதாக அங்குச் செய்தி இல்லை.  தந்தை கட்டளையின்படி பதினான்கு
ஆண்டுகள் காட்டில் உறைதல் வேண்டும், நகரினுள்ளாவது ஊரினுள்ளாவது
புகுதல் தகாது எனக் கூறி சுக்கிரீவன் வேண்டுகோளை மறுக்கிறான், இராமன்.

     எரிவனம் - வெயிலின் கடுமையால் தீப்போல் சுடுகின்ற காடு.  சீதையின்
சொல்லுக்கு யாழ் உவமை. 'குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும்,
இனிய சொல் கிளியே' (2073); 'குழலும் யாழும், கொழும்பாகும் அயிலும்
அமுதும் சுவை தீர்த்த மொழி' (3569) என்பன காண்க.  இராமனுக்குச்
சீதையோடன்றித் தனியே எய்தும் இன்பம் இன்பமாகாது.  அன்று ஏ - அசை
நிலைகள்.                                                      21

4136. '' தேவி வேறு அரக்கன் வைத்த
      சேமத்துள் இருப்ப, தான் தன்
ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு
      அரிய இன்பம்
மேவினான், இராமன்'' என்றால், ஐயா!
      இவ் வெய்ய மாற்றம்,
மூவகை உலகம் முற்றும்
      காலத்தும், முற்ற வற்றோ?

     தேவி -என் தேவியான சீதை;வேறு -தனியாய்;அரக்கன் வைத்த
சேமத்துள் இருப்ப -
இராவணன் கொண்டுபோய் வைத்த காவலில் இருக்க;
தான் தன் -
தான், தன்னுடைய;ஆவிபோல் துணைவரோடும் -உயிர்
போன்ற நண்பர்களோடு;அளவிடற்கு அரிய இன்பம் -அளவிடமுடியாத
அரிய இன்பத்தை;இராமன் மேவினான்-இராமன் விரும்பினான்;என்றால்-
என்று மக்கள் கூற நேர்ந்தால்;ஐய -ஐயனே!இவ்வெய்ய மாற்றம் -
இந்தக் கொடிய சொல்;மூவகை உலகம் -(மேல், கீழ், நடு எனும்) மூன்று
வகைப்பட்ட உலகங்களும்;முற்றும் காலத்தும்- அழியுங் காலத்திலும்;
முற்றவற்றோ -
முடிய வல்லதாகுமோ? (அந்தப் பெரும்பழி உலகங்கள்
அழிந்தாலும் அழியாது).

     உலகம் முற்றும் காலம் - ஊழிக்கால முடிவு.  அரக்கனது சிறைக்
காவலில் இருக்க.  இராமன் தன் நண்பர்களோடு இன்பங்களை விழைந்தான்
என்று உலகம் கூறும் பழிச்சொற்கு இராமன் அஞ்சினான் என்க. மேவுதல் -
விரும்புதல்.                                                   22

4137. 'இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை
      இழந்தும், போரின்
வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு,
      இன்னன மேன்மை இல்லாச்