பக்கம் எண் :

பம்பை வாவிப் படலம்33

கான நீள்நெறி -காட்டின் நீண்ட வழிகள்;தொலைய - நீங்குமாறு;
கடிதுநெடிது ஏகினார்
- விரைந்து நெடுந்தூரம் சென்றனர்.

     கரும்பாலைகளின் ஒலிமிகுதியைக் கூறியதால் கோசலநாட்டின் வளம்
புலனாயிற்று. 'ஆலை பாய் அமலை, ஆலைச் சாறுபாய் ஓதை(34) என நாட்டு
வர்ணனையில் கூறியுள்ளார்.  இப்போது ஆலையிட்ட கரும்புபோல
இராமலக்குவர் துன்பங்கள் அனுபவித்தாலும், பின்னர்க் கரும்பிலிருந்து பெறும்
சக்கரை போல அரக்கர்களை வென்று அறத்தை நிலைநாட்டி இன்பம்
அளிப்பர் என்பது குறிப்பாகும்.  சீதையின் சொல்லுக்கு அமுது உவமை.
'அஞ்சொற்கள் அமுதில் அள்ளிக்கொண்டவள்' என்றார் முன்னரும்.  (3136)
குளிர்ச்சியாலும், நிறத்தாலும், பரப்பாலும் சோலை கடலை ஒக்கும்.

     துழனி - ஒலி; ஆர்கலி - அன்மொழித்தொகை.                 42