| 'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என, நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினைவும்: |
அஞ்சனைக்கு ஒரு சிறுவன்-அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான அனுமன்;ஒரு மாணவப் படிவமொடு -ஒரு மாணாக்கன் வடிவம் தாங்கி; அஞ்சனக்கிரி அனைய -நீலமலையைப் போன்ற;மஞ்சனைக்குறுகி - மைந்தனாம் இராமனை நெருங்கி;அயல் மறைய நின்று- அருகில் மறைவாக நின்று;'வெஞ்சமத் தொழிலர்- (அவர்களை நோக்கி) இவர்கள் கொடிய போர்த்தொழில் உடையர்;தவ மெய்யர் -தவவேடம் தாங்கிய உடம்பினர்; கைச்சிலையர் - கையில் வில்லேந்தியுள்ளனர்';என நெஞ்சு அயிர்த்து - என்று மனத்தில் ஐயங்கொண்டு;கற்பினின் நினையும் -தனது கல்விஅறிவால் அவர்களைப் பற்றிச் சிந்தித்தான்; அனுமன் உண்மை அறிதற் பொருட்டுத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மாணாக்க வேடத்தோடு இராமனை அணுகினான். அஞ்சனை - அனுமனின் தாய்; அஞ்சனை மகன் ஆஞ்சனேயன். மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி. தயரதன் மகன் என்னும் கருத்தால் மஞ்சன் என்றார். மைந்தன் - வலிமையுடையவன் என்றும் கொள்ளலாம். போர்த்தொழில் உடையராயும், வில்லேந்தியவராயும் விளங்கியவர்கள் தவவேடம் கொண்டவராயும் தோன்றியதால் அனுமன் ஐயங்கொண்டான். இவ்வாறே சடாயுவும் இராமலக்குவரைக் கண்டபோது ''வினையறு நோன்பினர் அல்லர்; வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ'' (2700) எனஅயிர்த்தான். 4 3755. | 'தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின், மூவர்; மற்று, இவர் இருவர்; மூரி வில் கரர்; இவரை யாவர் ஒப்பவர், உலகில்? யாது, இவர்க்கு அரிய பொருள்? கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? |
தேவருக்கு -தேவர்களுக்கெல்லாம்; ஒரு தலைவர் ஆம் -ஒப்பற்ற தலைவர்களாகிய;முதல் தேவர் எனின் - முதன்மையான தேவர்களோ என்றால்;மூவர் -அவர்கள் மூவராவர்;இவர் இருவர் -இவர்கள் இருவராய் இருக்கின்றனர்;மூரிவில்கரர் -(அவர்கள் சூலம், திகிரி, வேதம் ஏந்தியிருக்க) இவர்கள் வில்லைத் தாங்கிய சுரத்தினர்;இவரை ஒப்பவர் - இவர்களை ஒத்தவர்கள்;உலகில் யாவர் -உலகில் யாருளர்?;இவர்க்கு அரிய பொருள் -இவர்களுக்குச் செய்தற்கு அரிய செயல்தான்;யாது - யாது உளது?;கேவலத்து - |