| இருமருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். |
தருமமும் தகவும் இவர் -தருமமும் நல்லொழுக்கமுமாகவே இவர்கள் கொள்ளத்தக்கவர்;தனம் எனும் தகையர் -தமக்குரிய செல்வமாக தருமத்தையும் தகவையும் எண்ணும் தன்மையுடையவர்கள்;இவர் கருமமும் - இவர்களது செயலும்;பிறிது ஓர் பொருள் -வெறோருபொருளை;கருதி அன்று - கருதியது அன்று;அது கருதின் -அது குறித்து ஆராய்ந்து பார்த்தால்;அருமருந்து அனையது -பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற பொருளிற்கு;இடை அழிவு வந்துளது -இடையிலே அழிவு வந்திருக்கின்றது; அதனை - அந்த அரிய பொருளையே;இவர்கள் - .;இருமருங்கிலும் - இரண்டு பக்கங்களிலும்;நெடிது துருவுகின்றனர் - நெடிதாகப் பார்வையைச் செலுத்தித் தேடுகிறார்கள். அனுமன் சூரியனிடம் எல்லாக்கலைகளையும் கற்றவனாதலின் இராமலக்குவரின் முகக்குறிப்புகளால் அவர்களின் நிலையை ஊகித்து அறிந்தனன். தருமமும் தகவும் செல்வமாகும் என்பதை 'அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை' (குறள் - 32) என வள்ளுவரும் குறித்தார். அருமருந்து - கிடைத்தற்கரிய தேவ அமுதம்; சீதை அம்மருந்து போன்றவள். 'மருந்து அனையதேவி' (5350) என்றது காண்க. 7 3758. | 'கதம் எனும் பொருண்மை இலர்; கருணையின் கடல் அனையர்; இதம் எனும் பொருள் அலது, ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்; சதமன் அஞ்சுறு நிலையர்; தருமன் அஞ்சுறு சரிதர்; மதனன் அஞ்சுறு வடிவர்; மறலி அஞ்சுறு விறலர்.' |
இவர்கள்--; கதம் எனும்-கோபம் என்னும்;பொருண்மை இலர்- பொருளின் தன்மையில்லாதவர்கள்;கருணையின் - கருணையால்;கடல் அனையர் -கடலை ஒத்தவர்கள்;இதம் எனும் பொருள் அலது -நன்மை என்கின்ற பொருளை அல்லாமல்;ஓர் இயல்பு உணர்ந்திலர் -வெறோரு பொருளை (தீமையை) அறிந்தவர்கள் அல்லர்;சதமன்-இந்திரனும்;அஞ்சுறு நிலையர் - அஞ்சத்தக்க தோற்றம் உள்ளவர்கள்;தருமன் - தரும தேவதையும்;அஞ்சுறு சரிதர் -அஞ்சத்தக்க ஒழுக்கம் உடையவர்கள்; மதனன் - மன்மதனும்;அஞ்சுறு வடிவர் - அஞ்சத்தக்க வடிவழகு பொருந்தியவர்கள்;மறலி - யமனும்;அஞ்சுறுவிறலர்- அஞ்சத்தக்க ஆற்றல் நிறைந்தவர்கள். |