பக்கம் எண் :

அனுமப் படலம்39

 இருமருங்கினும், நெடிது
     துருவுகின்றனர், இவர்கள்.

     தருமமும் தகவும் இவர் -தருமமும் நல்லொழுக்கமுமாகவே இவர்கள்
கொள்ளத்தக்கவர்;தனம் எனும் தகையர் -தமக்குரிய செல்வமாக
தருமத்தையும் தகவையும் எண்ணும் தன்மையுடையவர்கள்;இவர் கருமமும் -
இவர்களது செயலும்;பிறிது ஓர் பொருள் -வெறோருபொருளை;கருதி
அன்று -
கருதியது அன்று;அது கருதின் -அது குறித்து ஆராய்ந்து
பார்த்தால்;அருமருந்து அனையது -பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற
பொருளிற்கு;இடை அழிவு வந்துளது -இடையிலே அழிவு வந்திருக்கின்றது;
அதனை -
அந்த அரிய பொருளையே;இவர்கள் - .;இருமருங்கிலும் -
இரண்டு பக்கங்களிலும்;நெடிது துருவுகின்றனர் - நெடிதாகப் பார்வையைச்
செலுத்தித் தேடுகிறார்கள்.

     அனுமன் சூரியனிடம் எல்லாக்கலைகளையும் கற்றவனாதலின்
இராமலக்குவரின் முகக்குறிப்புகளால் அவர்களின் நிலையை ஊகித்து
அறிந்தனன்.

     தருமமும் தகவும் செல்வமாகும் என்பதை 'அறத்தினூஉங்கு ஆக்கமும்
இல்லை' (குறள் - 32) என வள்ளுவரும் குறித்தார்.  அருமருந்து -
கிடைத்தற்கரிய தேவ அமுதம்; சீதை அம்மருந்து போன்றவள். 'மருந்து
அனையதேவி' (5350) என்றது காண்க.                              7

3758.'கதம் எனும் பொருண்மை இலர்;
     கருணையின் கடல் அனையர்;
இதம் எனும் பொருள் அலது, ஓர்
     இயல்பு உணர்ந்திலர் இவர்கள்;
சதமன் அஞ்சுறு நிலையர்;
     தருமன் அஞ்சுறு சரிதர்;
மதனன் அஞ்சுறு வடிவர்;
     மறலி அஞ்சுறு விறலர்.'

     இவர்கள்--; கதம் எனும்-கோபம் என்னும்;பொருண்மை இலர்-
பொருளின் தன்மையில்லாதவர்கள்;கருணையின் - கருணையால்;கடல்
அனையர் -
கடலை ஒத்தவர்கள்;இதம் எனும் பொருள் அலது -நன்மை
என்கின்ற பொருளை அல்லாமல்;ஓர் இயல்பு உணர்ந்திலர் -வெறோரு
பொருளை (தீமையை) அறிந்தவர்கள் அல்லர்;சதமன்-இந்திரனும்;அஞ்சுறு
நிலையர் -
அஞ்சத்தக்க தோற்றம் உள்ளவர்கள்;தருமன் - தரும
தேவதையும்;அஞ்சுறு சரிதர் -அஞ்சத்தக்க ஒழுக்கம் உடையவர்கள்;
மதனன் -
மன்மதனும்;அஞ்சுறு வடிவர் - அஞ்சத்தக்க வடிவழகு
பொருந்தியவர்கள்;மறலி - யமனும்;அஞ்சுறுவிறலர்- அஞ்சத்தக்க ஆற்றல்
நிறைந்தவர்கள்.