விளங்குவான், வைகுவான், மயங்கினான், தயங்குவான் (4286 - 4290) என்ற சொற்கள் கிடந்தனன் (4291) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும். 18 | 4287. | தெள்ளியோர் உதவ, பெருஞ் செல்வம் ஆம் கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப் புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஓர் வெள்ளி மால் வரை என்ன விளங்குவான்.* |
தெள்ளியோர் உதவ -தெளிந்த அறிவுடையவரான இராமலக்கு வரால் வழங்கப்பெற்ற;பெருஞ்செல்வமாம் -பெரிய அரசாட்சிச் செல்வமாகிய; கள்ளினால் அதிகம் களித்தான் -கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக் களிப்பில் மிதந்தவனாய்;கதிர்ப்புள்ளி -ஒளிக்கற்றைகளின் சேர்க்கையையுடைய;மாநெடும் பொன் வரை -மிகப்பெரிய பொன்னிற மாலையில்;புக்கது -புகுந்து தங்கக் கூடிய;ஓர் வெள்ளி மால் வரை என்ன -ஒரு பொய வெள்ளி மலை போல;விளங்குவான் - விளங்குபவனும். களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வதைக் 'கள்' என்றார். சுக்கிரீவன், ஆட்சிச் செல்வத்தைத் தானாகப் பெறவில்லை. இராமலக்குவரின் உதவியால் பெற்றான். இதனைத் 'தெள்ளியோர் உதவ' என்றதனால் விளக்கினார். 'செல்வமாம் கள்' - செல்வத்தால் ஆகும் மயக்கம். வெண்ணிறமுள்ள சுக்கிரீவனுக்கு வெள்ளி மலையையும், பொன்னிறக் கட்டிலுக்கு (அரண்மனை)ப்பொன்மலையையும் உவமையாக்கினார். 'பொன் வரை புக்கதோர் வெள்ளி மால் வரையென்ன விளங்குவான்' - இல்பொருள் உவமை. 19 | 4288. | சிந்துவாரத் தரு, நறை, தேக்கு, அகில், சந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல் கந்த மா மலர்க் காடுகள், தாவிய மந்த மாருதம் வந்து உற, வைகுவான். |
சிந்துவாரத் தரு-கருநொச்சி மரம்;தேக்கு, அகில், சந்தம் -தேக்கு, அகில், சந்தன மரங்கள்;மா மயிற் சாயலர் -சிறந்த மயில் போன்ற சாயலையுடை பெண்களின்;தாழ்குழல் -நீண்ட கூந்தல்;கந்த மாமலர்க்காடுகள் -(கூந்தலில் சூடிய) மணமுள்ள மலர்களின் தொகுதி; (ஆகிய இவற்றில்);தாவிய மந்தமாருதம் -தழுவிய மென்காற்று;வந்து உற வைகுவான் -வந்து தன்மேல் வீசத் தங்குபவனும், |