பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 429

     கரு நொச்சி முதலியவற்றில் தோய்ந்து வருவதால் நறுமணம் கொண்ட
மென்காற்றுத் தன்மேல் வீசச் சுக்கிரீவன் தங்கியுள்ளான் என்பது.
மந்தமாருதம்: இளந்தென்றல்.                                      20

4289. தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்,
பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால்,
மத்த  வாரணம் என்ன மயங்கினான்;

     தித்தியாநின்ற - தித்திக்கின்ற;செங்கிடை வாய்ச்சியர் -செங்கிடை
போலச் சிவந்த இதழ்களையுடைய பெண்களின்;முத்த வாள் நகை -
முத்துப்போல வெண்ணிறமான புன்னகை செய்கின்ற;முள் எயிற்று -
கூர்மையான பற்களிலிருந்து;ஊறுதேன் -சுரக்கின்ற தேன்;பித்தும்
மாலும்-
பித்தினையும் மயக்கத்தையும்;பிறவும் -காமம், மதம், மறதி,
சோர்வு, துயில்முதலிய தாமசக் குணச் செயல்களையும்;பெருக்கலான் -
மிகுதிப்படுத்துவதனால்;மத்த வாரணம் என்ன -மதங்கொண்ட
யானைபோல;மயங்கினான் -அறிவு அழிந்தவனும்.

     சுக்கிரீவன், மகளிரின் இதழ் அமுதத்தை என்றைக்கும் சுவை
தருவதெனக் கருதி மயங்கிக் கிடந்தான் என்பது.  செங்கிடை என்பது சிவந்த
நிறம் உடைய ஒருவகை நெட்டி.  தேன் - உவமையாகுபெயர். - தித்தியா
நின்ற தேன் என இயைக்கவும்.                                    21

4290.மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து
உகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால்,
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
தக மலர்ந்து, பொலிந்து தயங்குவான்.

     மகுட குண்டலம் ஏய் -மகுடமும் குண்டலங்களும் பொருந்திய;முக
முண்டலத்து -
முகமண்டலத்திலிருந்து;உகும் நெடுஞ்சுடர்க் கற்றை -வீசும்
மிகுதியான ஒளியின் தொகுதி;உலாவலால் -(வெண்மை யான உடம்பு
முழுவதும்) பரவுவதால்;பகலவன் சுடர்பாய் -சூரியனது கதிர்கள் பரவிய;
மால்பனி வரை தக -
மிக்க பனி படர்ந்த இமய மலையைப்போல;மலர்ந்து
பொலிந்து -
மலர்ச்சியுற்றுப் பொலிவோடு;தயங்குவான் -விளங்குபவனுமாய்.

     சூரியனது கதிர்கள் பரவுகின்ற இமயமலையைப் போன்று சுக்கிரீவன்
விளங்கினான் என்பது உவமையணி.                               22

அங்கதன் சுக்கிரீவனைத் துயிலெழுப்புதல்

4291.கிடந்தனன் - கிடந்தானைக்
      கிடைத்து இரு