பக்கம் எண் :

430கிட்கிந்தா காண்டம்

 தடங் கை கூப்பினன், தாரை
      முன்நாள் தநத
மடங்கல் வீரன், நல்
      மாற்றம் விளம்புவான்
தொடங்கினான், அவனைத்
      துயில் நீக்குவான்.

     கிடந்தனன் -(சுக்கிரீவன்) தூங்கிக் கொண்டிருந்தான்;கிடந் தானை -
(அவ்வாறு) படுத்திருந்தவனான அவனை;தாரை முன்நாள் தந்த -  தாரை
முன்னாளில் பெற்றெடுத்த;மடங்கல் வீரன் -ஆண் சிங்கம் போன்ற
வீரமுடைய அங்கதன்;கிடைத்து -நெருங்கிச்சென்று;இரு தடக்கை
கூப்பினன் -
(தன்னுடைய) பெரிய கைகளைக் குவித்து அஞ்சலி செய்தவாறு;
அவனைத்துயில் நீக்குவான் -
அந்தச் சுக்கிரீவனைத் தூக்கத்திலிருந்து
எழுப்பி;நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான் -மனத்திற்கு உகந்த
நல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

     கிடந்தனன்: வினைமுற்று: கிடந்தான்: வினையாலணையும் பெயர்.   23

4292.'எந்தை! கேள்: அவ்
      இராமற்கு இளையவன்,
சிந்தையுள் நெடுஞ்
      சீற்றம் திரு முகம்
தந்து அளிப்ப, தடுப்ப
      அரும் வேகத்தன்
வந்தனன்; உன் மனக்
      கருத்து யாது?' என்றான்.

     எந்தை கேள் -என் தந்தையே! நான் சொல்வதைக் கேட்பாயாக! அவ்
இராமற்கு இளையவன் -
அந்த இராமனுக்குத் தம்பியான இலக்குவன்;
சிந்தையுள் நெடுஞ்சீற்றம் -
மனத்திற் படிந்துள்ள பெருங் கோபத்தை;
திருமுகம் தந்து அளிப்ப -
முகமானது எடுத்துக் காட்ட;தடுப்ப அரும்
வேகத்தன் -
(யாராலும்) தடுக்க முடியாத வேகத்தோடு;வந்தனன் -வந்து
சேர்ந்துள்ளான்;உன் மனக் கருத்து யாது -உனது உள்ளக் கருத்து என்ன;
என்றான் -
என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கேட்டான்.

     எந்தை -மரூஉ.                                           24

4293. இனைய மாற்றம் இசைத்தனன்
      என்பது ஓர்