பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 431

 நினைவு இலான், நெடுஞ்
      செல்வம் நெருக்கவும்,
நனை நறுந் துளி
      நஞ்சு மயக்கவும்,
தனை உணர்ந்திலன், மெல்
     அணைத் தங்கினான்.

     நெடுஞ் செல்வம் நெருக்கவும் -அரசாட்சி என்னும் பெரிய செல்வம்
மமதையைத் தந்தாலும்;நறு நனை துளி நஞ்சு மயக்கவும்- மணமுள்ள
கள்ளின் துளியாகிய நஞ்சு, மயக்கத்தை அளித்ததாலும்;தனை உணர்ந்திலன்
-
தன்னை உணராமையால் (அச்சுக்கிரீவன் மெய்ம மறந்து);இனைய மாற்றம்
இசைத்தனன் -
அங்கதன் சொன்ன வார்த்தைகள் இன்னவையென்று;என்பது
ஓர் நினைவு இலான் -
புரிந்து கொள்ள இயலாத மன நிலையில்;மெல்
அணித் தங்கினான் -
மென்மையான படுக்கையில் (முன் போலவே)
கிடந்தான்.

     தன்னையுண்டவரை அறிவில்லாதவராக ஆக்குவதால் கள்ளை 'நஞ்சு'
என்றார்.  'எஞ்ஞான்றும், நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' (குறள்: 926).  நெடுமை:
பெருமை. நனி நறுந்துளி நஞ்சு - உருவகம்.                        25

அங்கதன் அனுமனிடம் செல்லுதல்

4294. ஆதலால், அவ் அரசு இளங்
      கோள் அரி, -
யாதும் முன் நின்று
     இயற்றுவது இன்மையால்,
கோது இல் சிந்தை
      அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் -
      போதகமே அனான்.

     ஆதலால் -அரசாட்சிச் செருக்காலும், கள்ளின் மயக்கத்தாலும் தன்னை
மறந்து சுக்கிரீவன் படுக்கையை விட்டு எழாமல் கிடக்கவே;போதகமே
அனான் -
யானைக் கன்று போன்றவனும்;அவ் அரசு இளங்கோளரி -
இளமையான வலிய ஆண் சிங்கம் போன்றவனுமான அவ் அங்கதன்;முன்
நின்று இயற்றுவது -
சுக்கிரீவன் முன்னே நின்று செய்யத்தக்கது;யாதும்
இன்மையால் -
எதுவும் இல்லாததால்;கோது இல் சிந்தை அனுமனை -
குற்றமற்ற மனத்தையுடைய அனுமனை;கூவுவான் போதல் மேயினான் -
அழைப்பதற்காக (அவனிடம்) செல்ல லானான்.

     வலிமை, துணிவு, முன்னும் பின்னும் நோக்குதல் இவற்றால் சிங்கமும்,
நடை, வலிமை, பெருமிதம் ஆகியவற்றால் யானையும் அங்கதனுக்கு
உவமையாயின.                                                26