பக்கம் எண் :

432கிட்கிந்தா காண்டம்

அங்கதன் அனுமனுடன் தாரையின் கோயிலை அடைதல்

4295. மந்திரத் தனி மாருதி தன்னொடும்,
வெந் திறல் படை வீரர் விராய் வர,
அந்தரத்தின் வந்து, அன்னைதன் கோயிலை,
இந்திரற்கு மகன் மகன் எய்தினான்.

     இந்திரற்கு மகன் மகன் -இந்திரன் மைந்தனான வாலியின் மகனாகிய
அங்கதன்;மந்திரத் தனி மாருதி தன்னொடும் -ஆலோசனை யில் வல்ல
ஒப்பற்ற வாயு மகனான அனுமனோடு;வெந்திறல் படை வீரர் -மிக்க
வலிமையுள்ள வீரர்கள்;விராய் வர -திரண்டு (தன்னுடன்) வர;அந்தரத்தின்
வந்து -
(சுக்கிரீவனது அரண்மனையிலிருந்து) வெளிப்போந்து;அன்னைதன்
கோயிலை -
(தன்) தாயான தாரையின் மாளிகையை;எய்தினான் -
அடைந்தான்.

     இந்திரற்கு மகன் மகன் -இந்திரனுக்குப் பேரன்; அங்கதன் அந்தரத்தின்
வந்து - மனக் கலக்கத்தோடு வந்து; வான் வழியாகத் தாவி வந்து - என்றும்
உரைக்கலாம்.  அந்தரம்: வெளிப்புறம், மனக்கலக்கம்.                 27

தாரையின் பேச்சு

4296. எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா,

     எய்தி -(அங்கதன் தாரையை அடைந்து);மேல் செயத் தக்கது என் -
இனி நாம் செய்யத்தக்க செயல் என்ன;என்றலும் -என்று அவளை
வினாவிய அளவில்;செய்தற்கு அரு -(அவள் அவ்வானரர்களை நோக்கி)
செய்யத் தகாத;நெடுந்தீயன -பெரிய தீச் செயல்களை;நொய்தில் செய்திர்
-
எளிதிலே செய்துவிட்டீர்கள்;அன்னவை நீக்கவும் -அச் செயல்களால்
வரும் கேடுகளை எளிதில் நீக்கிக் கொள்ளவும்;நோக்குதிர் -வழி
தேடுகிறீர்கள்;உதவி கொன்றீர் -செய்ந்நன்றி மறந்தவர்களான நீங்கள்;
உய்திர் போலும் -
தப்பி வாழ்வீர்கள் போலும்!எனா - என்று சொல்லி. . .

     விளம்புகின்றாள் என அடுத்த கவியோடு முடியும்.  'உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110), உய்ய மாட்டீர் என்பது
வலியுறுத்தப்பட்டது.  நெடுந்தீயன - மிக்க கொடியன.  நோக்குதல் -
வழிதேடுதல், ஆலோசித்தல், 'செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென் றறம்
பாடிற்றே' என்ற பழம் பாடல் கருத்தினை நினைவு கூர்க. (புறம் 34)     28

4297. மீட்டும் ஒன்று
      விளம்புகின்றாள்: ' ''படை