| 4299. | 'தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன் ஆவி நீங்கினன்போல் அயர்வான்;அது பாவியாது, பருகுதிர் போலும், நும் காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர். |
தேவி நீங்க -(தன்) மனைவியான சீதை பிரிந்திருக்க;அத் தேவ ரின் சீரியோன் -(அத்துயரத்தால்) தேவர்களைக் காட்டிலும் சிறப்புள்ளவனான அந்த இராமன்;ஆவி நீங்கினன் போல் அயர்வான் -உயிர் நீங்கியவன் போலத் தளர்ந்துள்ளான்;அது பாவியாது -அதை (நீங்கள்) மனத்தில் கருதிப் பார்க்காமல்;நும் நாள் காவி மலர்க் கண்ணியர் -காலை பூத்த கருங் குவளை போன்ற கண்களையுடைய உங்கள் மனைவியரின்;காதல் நீர் -அன்பு வழிப்பட்ட இன்பத் தேனை;பருகுதிர் போலும் -குடித்து மகிழ்கின்றீர் போலும்! சிற்றின்ப வயப்பட்டுக் கடமையை மறந்த சுக்கிரீவனது செயலை மனத்திற் கொண்டு தாரை இவ்வாறு பேசலானாள் என்பது. 31 | 4300. | 'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை; நிறம் பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால், மறம் செய்வான் உறின், மாளுதிர்; மற்று இனிப் புறஞ்செய்து ஆவது என்?' என்கின்ற போதின்வாய், |
மெய் திறம்பினீர் -சத்தியம் தவறிவிட்டீர்கள்;உதவியைச் சிதைத் தீர்-(இராமன் செய்த) உதவியை மறந்தீர்கள்;நிறம் பொலீர் -குணத்தால் பொல்லாதவர்கள் ஆனீர்கள்;உங்கள் தீவினை நேர்ந்ததால் -உங்களது பாவச் செயல் பயன்தர வந்ததால்;மறம் செய்வான் உறின் -(அந்த வீரர் உம்மை எதிர்த்துப்) போர் செய்யத் தொடங்கினால்;மாளுதிர் -(அவரால்) மடிவீர்கள்;இனிப் புறம் செய்து -இனி மேற்கொண்டு என்ன செய்தும்; ஆவது என் -அதனால் விளையக் கூடிய பயன் யாது;என்கின்ற போதின் வாய் -என்று (அங்கதன் முதலோரைத் தாரை) கண்டித்துப் பேசும் சமயத்தில். . . . நிறம் பொல்லீர் (பொலீர்); நிறம் - குணம். திறம்புதல்: மாறுபடுதல். 32 வாயிலைத் தாளிட்டு வானரங்கள் போருக்குத் தயாராதல் | 4301. | கோள் உறுத்தற்கு அரிய குரக்கினம், நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத் |
|