பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 437

வானரங்களும்;வெருக் கொளா -அச்சங் கொண்டு;வெய்தின் நின்ற -
(மனங் கொதித்துத்)  தவித்தன.

     வெய்தின் நிற்றல்: கொடிய துன்பம் அடைதல்.  யோசனை - ஓர்
எல்லையளவு. 3, 71/2, கல் தொலைவு என்பர்.  வெருங் கொளா - செய்யா
என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.  நோன்மை: வலிமை. 37

4306. பரிய மா மதிலும், படல் வாயிலும்
சரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை
நெரிய, நெஞ்சு பிளகக, நெடுந் திசை
இரியலுற்றன; இற்றில இன் உயிர்,

     (இவ்வாறு)பரிய மா மதிலும் -பருத்து உயர்ந்த அம் மதிலும்;படல்
வாயிலும் -
அகன்று நின்ற நகர வாயிலும்;சரிய வீழ்ந்த  - சாய்ந்து
விழுந்ததால் உண்டாகிய;தடித்தின் முடித்தலை நெரிய -இடியால் (தங்கள்)
தலையிடம் நொறுங்கவே;நெஞ்சு பிளப்ப -(அம் மதிலைச் சார்ந்து நின்ற
வானரங்கள்) நெஞ்சு உறுதியழிந்து கலங்கி;நெடுந்திசை -திசைகள் தோறும்;
இரியல் உற்றன -
நெடுந்தூரம் ஒடின;இன்னுயிர் இற்றில -(அதனால்)
இனிய உயிர் அழியாதனவாயின.  (தப்பிப் பிழைத்தன)

     மதில்: ஏணி கொண்டும் ஏறமுடியாத உயர்வும், புறத்தே உள்ளவர்க்குத்
தோண்டமுடியாதவாறு அடி அகலமும், உள்ளே இருந்து தொழில்
செய்வோர்க்குத் தலையகலமும் கொண்டிருக்கவேண்டும்.  இவ்வியல்புகளை
உணர்த்தவே 'பரிய மா மதில்' என்றார்.  முடித்தலை: மதில்களின் சிகரம்.
உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும்
நூல் - (குறள் 743).                                            38

4307. பகரவேயும் அரிது; பரிந்து எழும்
புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்,
சிகர மால் வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது, மா நகர்,

     பகரவேயும் அரிது -(குரங்குகளின் அச்சத்தால் நிகழ்ந்தவற்றைச்)
சொல்வதற்கும் அரியது;பரிந்து எழு -கொடிய துன்பப்பட்டு இருப்பிடத்தை
விட்டு ஓடிய;புகர் இல் வானரம் -குற்றமற்ற அக் குரங்குகள்;அஞ்சிய
பூசலால் -
அச்சத்தால் செய்த பேரொலியால்;மா நகர் -சிறந்த அக்
கிட்கிந்தை நகரமானது;சிகர மால்வரை சென்று -சிகரங்களையுடைய பெரிய
(மத்தாகிய) மந்தர மலை புகுந்து;திரிந்துழி மகர வேலையை ஒத்தது -
சுழன்ற பொழுது ஆரவாரித்த மீன்களைக் கொண்ட பாற்கடலைப் போன்றது.

     பூசல் -ஆரவாரம்.                                         39

4308.வானரங்கள் வெருவி, மலை ஒரீஇ,
கான் ஒருங்கு படர, அக் கார் வரை,