பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 441

கூட்டத்தைக் கொண்டு;வலம் கொள்வீதி -மேன்மையான பெரிய அவ்
வீதியின்;நெடுவழி மாற்றினாள் -வழியைத் (தாரை) தடுத்தாள்.

     தாரை தன் தோழியர் கூட்டத்தோடு சென்று இலக்குவன் வந்து
கொண்டிருந்த அவ் வீதியின் வழியைத் தடுத்தாள் என்பது.               45

4314.வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.

     அணிதொறும் -அணிந்துள்ள அணிகலன்கள் தோறும்;வில்லும்
வாளும் மின்னிட -
வில்லும் வாளும் ஒளிவிடவும்;மெல் அரிக் குரல் -
மெல்லிய பரல்களையுடைய காற்சிலம்புகளின் ஒலியும்;மேகலை ஆர்த்து எழ
-
இடையணியான மேகலை (பறையொலிபோல) ஆரவாரித்து எழவும்;
பல்வகைப் புருவக் கொடி -
பலவகைப்பட்ட புருவங்களாகிய கொடிகள்;
பம்பிட -
நிறைந்திருக்கவும்;வல்லி ஆயம் -மகளிர் கூட்டமாகிய சேனை;
வலத்தினில் வந்தது -
வலிமையோடு (இலக்குவனை) வளைத்துக் கொண்டது.

     மகளிர் கூட்டம் இலக்குவனைச் சூழ்ந்து வழிமறித்ததை, ஒரு சேனை
வந்து சூழ்ந்ததாக வருணித்தார்.  மகளிர் இடம் பெயர்ந்து செல்லும்போது
அவர்களின் சிலம்பும் மேகலையுமாகிய அணிகள் ஒலிப்பதைப் போர்ப்
பறைகளின் ஒலியாக உவமித்தார்.  அரி: சிலம்பின் உட்பரல்.  புருவக் கொடி -
கொடி போன்ற புருவம்.  கொடி - புருவக்கொடியையும், போர்க் கொடியையும்
குறித்தது.  கொடி: படர்கொடியும் துவசமும்.  சிலேடையை அங்கமாகக்
கொண்ட உருவக அணி.  மெல்லரி - பண்புத் தொகையன்மொழி (சிலம்பு)
வல்லி - (பெண்) உவமையாகுபெயர்.                               46

இலக்குவன் மகளிரைப் பார்க்க அஞ்சுதல்

ஆசிரிய விருத்தம்

4315. ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல்
      ஆம் தடந் தேர் சுற்ற,
வேற் கண் வில் புருவம
      போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது,
பேர்க்க அருஞ் சீற்றம் பேர,
      முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்,
பார்க்கவும் அஞ்சினான், அப்
      பனையினும் பெரிய தோளன்.

     ஆர்க்கும் நூபுரம் பேரி -ஆரவாரிக்கின்ற காற் சிலம்புகள் பல
வகைப் பேரிகைகளாக முழங்க;அல்குல் ஆம் தடந்தேர் -அல்குலாகிய
பெரிய தேர்;சுற்ற -கவிந்து கொள்ள;வேற்கண் -கண்கள் வேற்