படைகளாகவும்;வெம் புருவப் போர்வில் -கொடிய புருவங்கள் போர் செய்யும் விற்படைகளாகவும் (அமைய);மெல்லியர் வளைந்தபோது - மகளிரது சேனை சூழ்ந்துகொண்ட பொழுது;அப் பனையினும் உயர்ந்த தோளான் -பனையை விட நெடிய தோள்களையுடைய அந்த இலக்குவன்; பேர்க்க அரும் -(யாராலும்) மாற்றமுடியாத;சீற்றம் பேர -கோபம் தணிய; முகம் பெயர்ந்து -முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக் கொண்டு;ஓதுங்கிற்று அல்லால் -ஒதுங்கி நின்றதேயல்லாமல்;பார்க்கவும் அஞ்சினான் -(அப் பெண்களைக்) கண்ணால் பார்ப்பதற்கும் அச்சமுற்றான். மகளிர் நேர்பட்ட மாத்திரத்தில் இலக்குவனது முகம் சினம் நீங்கி இயல்பாக ஆனமை தோன்ற 'முகம் பெயர்ந்து' எனத் தன்வினையால் கூறினார். முதல் இரண்டடிகள் - உருவக அணி. 47 தாரை இலக்குவனை நோக்கிப் பேசுதல் | 4316. | தாமரை வதனம் சாய்த்து, தனு நெடுந் தரையில் ஊன்றி, மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப, பூமியில் அணங்கு அனார்தம் பொதுவிடைப்புகுந்து, பொன் - தோள் தூமன நெடுங் கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்: |
மைந்தன் -இலக்குவன்;தாமரை வதனம் சாய்த்து -தாமரை போன்ற தனது முகத்தைச் சாய்த்துக் கொண்டு;நெடுந் தன தரையின் -கையில் தாங்கிய நெடிய வில்லை நிலத்திலே;ஊன்றி -ஊன்ற வைத்து;மாமியர் குழுவின் -மாமியர் கூட்டத்தின் நடுவே;வந்தான் ஆம் என -வந்த மருமகனைப் போல;நிற்ப -(கூச்சத்தோடு) நிற்க;பொன் தோள் -அழகிய தோள்களையும்;தூ மனம் - தூய்மையான மணத்தையும்;நெடுங்கண் தாரை-நீண்ட கண்களையுமுடைய தாரை;பூமியில் அணங்கு அனார்தம்- நிலவுலகிற்கு வந்த தேவமகளிர் போன்ற வானரப் பெண்களின்;பொதுவிடைப் புகுந்து -கூட்டத்திடையே புகுந்துசென்று;நடுங்குவாள் இனைய சொன்னான் -நடுங்கிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொல்லத் தொடங்கினாள். அன்னியன் எதிரில் வந்து நிற்பதற்குக் கூச்சப்பட்டு மாதர் கூட்டத்திடையே ஒதுங்கி நிற்பவளும், இலக்குவனோடு பேசுவதற்குக் கூசி உள்ளமும் உடலும் நடுங்குபவளுமான தாரையின் குணநலம் உணர்த்தப் பெற்றது. நடுங்குவாள்: முற்றெச்சம்; வினையாலணையும் பெயராக்கியும் பொருள்உரைக்கலாம். 48 | 4317. | 'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி, |
|