| | பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். * |
மங்கல அணியை நீக்கி -தாலியை அணியாமல் விடுத்து;மணி அணி துறந்து -இரத்தின மணிகள் போன்ற மற்றைய அணிகலன் களையும் நீக்கிவிட்டு;வாசக் கொங்கு அலர் -மணமிக்க தேன் பெருகுகின்ற மலர்களின்;கோதை மாற்றி -மாலை சூடுவதையும் விட்டு;குங்குமம் சாந்தம் கொட்டா -குங்குமப் பூவின் குழம்பையும், சந்தனக் கலவையையும் பூசாத;பொங்கு வெம் முலைகள் -பருத்துள்ள வெம்மையான முலைகள்; பூகக் கழுத்தோடு மறையப்போர்த்து -பாக்குமரம் போன்ற கழுத்துடன் மறையும்படி (மேலாடையால்) நன்றாகப் போர்த்துள்ள;நங்கையைக் கண்ட வள்ளல் -அத் தாரையைப் பார்த்த அருள்வள்ளலான இலக்குவன்; நயனங்கள் பனிப்ப -(தாரை யின் தோற்றம் கண்டதாலும், தன் தாயரை நினைந்ததாலும்) தன் கண்களில் நீர் துளிக்க;நைந்தான் -வருந்தினான். தாரையின் கைம்மைக் கோலம் இங்கு விளக்கப் பெறுகின்றது. இலக்குவன் கண்ணீர் மல்கி நைந்துருகுவதற்குக் காரணம் தன்னுடைய தாயரும் இப்படித்தானே கைம்மைக் கோலம் பூண்டிருப்பர் என்ற நினைவினால். மங்கலவணி. 'தாலி'; 'ஈகையரிய இழையணி மகளிர்' - புறம்.127 52 இலக்குவன் தாரையிடம் உரைத்தது | 4321. | 'இனையர் ஆம், என்னை ஈன்ற இருவரும்' என்ன வந்த நினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்; 'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும்' என்று, அப் புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்; |
என்னை ஈன்ற இருவரும் -என்னைப் பெற்றெடுத்த தாய்மார் இருவரும்;இனையர் என்ன -இத் தன்மையராகவே இருப்பார்கள் என்று; வந்த நினைவினால் -மனத்தில் தோன்றிய நினைவால்;அயர்ப்புச் சென்ற-வாட்டம் மிக்க;நெஞ்சினன் -மனத்தையுடைய வனாய்;நெடிது நின்றான்-நீண்ட நேரம் ஒன்றும் தோன்றாமல் அந்த இலக்குவன் திகைத்து நின்றான்;வினவினாட்கு எதிர் -(தன்னிடம்) கேள்வி கேட்டவளுக்கு மறுமொழியாக;ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் -ஒரு வார்த்தை விடையாகச்சொல்லவும் வேண்டும்;என்று -என்று கருதி;அப் புனை குழலாட்கு -அழகிய கூந்தலையுடைய |