பக்கம் எண் :

446கிட்கிந்தா காண்டம்

அத் தாரையை நோக்கி;வந்த காரியம் -வந்த செயல் இன்ன தென்று;
புகல்வது ஆனான் -
சொல்லலானான்.

     இலக்குவன் தன் தாயரைப் பற்றிய நினைவால் சிறிது நேரம் ஒன்றும்
பேசாமல் இருந்தான்; பின்பு தன்னை வினவியவளுக்கு விடையளிக்காமல்
இருப்பது தகுதியாகாது என்று தான் வந்த செயலைக் கூற முற்பட்டான்
என்பது.  தாயர் இருவர்; தன் தாயான சுமித்திரையும், இராமன் தாயான
கோசலையும்.                                               53

4322.'  ''சேனையும் யானும் தேடித்
      தேவியைத் தருவென்'' என்று,
மானவற்கு உரைத்த மாற்றம்
      மறந்தனன், அருக்கன் மைந்தன்;
''ஆனவன் அமைதி வல்லை அறி''
      என, அருளின் வந்தேன்;
மேல் நிலை அனையான் செய்கை
      விளைந்தவா விளம்புக!' என்றான்.

     சேனையும் யானும் -என் சேனையும் நானும்;தேவியைத் தேடித்
தருவென் -
சீதையைத் தேடிக் கொண்டு சேர்ப்பேன்;என்று மான வற்கு -
என்று மனுகுல மன்னனான இராமனுக்கு;அருக்கன் மைந்தன் -சூரியன்
மகனான சுக்கிரீவன்;உரைத்த மாற்றம் மறந்தனன் -தான் சொன்ன
வார்த்தையை மறந்துவிட்டான்;ஆனவன் அமைதி -அத்தகையை
சுக்கிரீவனின் நிலைமையை;வல்லை அறி என -விரைவில் சென்று நீ
அறிந்து வருவாயாக என்று (இராமன் என்னிடம்) சொல்ல;அருளின்
வந்தேன் -
அந்தக் கட்டளைப்படி நான் இங்கே வந்தேன்;மேல்நிலை
அனையான் -
மேன்மையான அரசாட்சியைப் பெற்ற அச் சுக்கிரீவனது;
செய்கை விளைந்தவா -
செயல்முறை நிகழ்ந்த விதத்தை;விளம்புக
என்றான் -
சொல்லுக என்று (தாரையைப் பார்த்து) இலக்குவன் கூறினான்.

     சுக்கிரீவன் இராமனிடம் சொன்னபடி வராததால் அவனது செயலை
அரிய வந்தேன்; அவனது செயல்தான் என்ன என்று இலக்குவன் தாரையை
வினவினான் என்பது. விளைந்தவாறு என்பது ஈறுகெட்டு நின்றது.        54

தாரையின் மறுமொழி

4323.சீறுவாய்அல்லை - ஐய! -
      சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய்; நீ அலால், மற்று
     ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறு வேறு உலகம் எங்கும்
      தூதரை விடுத்து, அவ் எல்லை