அத் தாரையை நோக்கி;வந்த காரியம் -வந்த செயல் இன்ன தென்று; புகல்வது ஆனான் -சொல்லலானான். இலக்குவன் தன் தாயரைப் பற்றிய நினைவால் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தான்; பின்பு தன்னை வினவியவளுக்கு விடையளிக்காமல் இருப்பது தகுதியாகாது என்று தான் வந்த செயலைக் கூற முற்பட்டான் என்பது. தாயர் இருவர்; தன் தாயான சுமித்திரையும், இராமன் தாயான கோசலையும். 53 | 4322. | ' ''சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென்'' என்று, மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்; ''ஆனவன் அமைதி வல்லை அறி'' என, அருளின் வந்தேன்; மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக!' என்றான். |
சேனையும் யானும் -என் சேனையும் நானும்;தேவியைத் தேடித் தருவென் -சீதையைத் தேடிக் கொண்டு சேர்ப்பேன்;என்று மான வற்கு - என்று மனுகுல மன்னனான இராமனுக்கு;அருக்கன் மைந்தன் -சூரியன் மகனான சுக்கிரீவன்;உரைத்த மாற்றம் மறந்தனன் -தான் சொன்ன வார்த்தையை மறந்துவிட்டான்;ஆனவன் அமைதி -அத்தகையை சுக்கிரீவனின் நிலைமையை;வல்லை அறி என -விரைவில் சென்று நீ அறிந்து வருவாயாக என்று (இராமன் என்னிடம்) சொல்ல;அருளின் வந்தேன் -அந்தக் கட்டளைப்படி நான் இங்கே வந்தேன்;மேல்நிலை அனையான் -மேன்மையான அரசாட்சியைப் பெற்ற அச் சுக்கிரீவனது; செய்கை விளைந்தவா -செயல்முறை நிகழ்ந்த விதத்தை;விளம்புக என்றான் -சொல்லுக என்று (தாரையைப் பார்த்து) இலக்குவன் கூறினான். சுக்கிரீவன் இராமனிடம் சொன்னபடி வராததால் அவனது செயலை அரிய வந்தேன்; அவனது செயல்தான் என்ன என்று இலக்குவன் தாரையை வினவினான் என்பது. விளைந்தவாறு என்பது ஈறுகெட்டு நின்றது. 54 தாரையின் மறுமொழி | 4323. | சீறுவாய்அல்லை - ஐய! - சிறியவர் தீமை செய்தால், ஆறுவாய்; நீ அலால், மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்; வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து, அவ் எல்லை |
|