| | ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ? |
ஐய! சீறுவாய் அல்லை -ஐயனே! கோபப்படாமல் இருப்பாயாக; சிறியவர் தீமை செய்தால் -(அறிவு முதலியவற்றால் சிறியவர்கள்) தீமைகள் செய்தால்;ஆறுவாய் -பெரியவனான நீ பொறுத்துக் கோபத்தைத் தணித்துக் கொள்வாயாக;நீ அலால் மற்று ஆர் உளர் -(அவ்வாறு இருப்பதற்கு) உன்னைத் தவிர வேறு யார்தான் இருக்கின்றார்கள்?அயர்ந்தான் அல்லன் - சுக்கிரீவன் தான் சொன்ன சொல்லில் தளர்ந்து விடவில்லை;உலகம் எங்கும் -(வானர சேனை களைத் திரட்ட) உலகத்தின் எல்லா இடங்களிலும்;வேறு வேறு தூதரை -தனித் தனியே வானரத் தூதர்களை;விடுத்து - அனுப்பிவைத்து;அவ் எல்லை -அந்த இடங்களிலிருந்து;ஊறுமா நோக்கி -அச் சேனைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக்கொண்டு;தாழ்த்தான் - தாமதித்திருக்கின்றான்;உதவி மாறு உதவி -(நீங்கள் அச் சுக்கிரீ வனுக்குச்) செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்று;உண்டோ -செய்வ தற்கு உள்ளதோ (இல்லை). சிறியவர் தீமை செய்தால் அதைப் பொறுப்பது பெரியவர் கடனாகும். சுக்கிரீவன் செல்வ வாழ்க்கை முதலியவற்றால் மயங்கியுள்ளான் என்று கருதுமாறு இருந்தாலும், அவன் உங்களது உதவியை மறக்கவில்லை; அங்கங்கே தூதரை அனுப்பி வானர சேனையின் வருகையை எதிர்பார்த்துள்ளான்; அதனால் தாமதித்து இருக்கின்றான் என்று தாரை சொன்னாள். உதவி மாறு உதவி: 'செய்யா மற் செய்த உதவி', 'காலத்தினாற் செய்த நன்றி' ஊறு: உறுதல் - முன்னிலை நீண்டது. ஊறுமா றுகர ஈறு குறைந்தது. 55 | 4324. | 'ஆயிர கோடி தூதர், அரிக் கணம் அழைக்க, ஆணை போயினர்'; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத் தாயினும் நல்ல நீரே தணிதிரால்; தருமம் அஃதால்; தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்? |
ஆயிர கோடி தூதர் -ஆயிரங் கோடியளவுள்ள எண்ணற்ற தூதர்கள்; அரிக் கணம் அழைப்ப -வானரங்களின் கூட்டத்தை அழைத்து வரும் பொருட்டு;ஆணை போயினர் -(சுக்கிரீவன்) கட்ட ளைப்படி (உலகெங்கும்) போயிருக்கின்றார்கள்;புகுதும் நாளும் புகுந்தது - (அவ் வானர சேனையும்) வந்துசேர வேண்டிய காலமும் நெருங்கியது;புகல் புக்கோர்க்கு -சரணம் அடைந்தவர்களுக்கு;தாயினும் இனிய நீரே -பெற்ற தாயைக் காட்டிலும் அன்பு காட்டும் நீங்களே;தணிதிர் -கோபத்தைத் தணிப்பீராக;அஃது தருமம் -அவ்வாறு |