பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 447

 ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி
      மாறு உதவி உண்டோ?

     ஐய! சீறுவாய் அல்லை -ஐயனே! கோபப்படாமல் இருப்பாயாக;
சிறியவர் தீமை செய்தால் -
(அறிவு முதலியவற்றால் சிறியவர்கள்) தீமைகள்
செய்தால்;ஆறுவாய் -பெரியவனான நீ பொறுத்துக் கோபத்தைத் தணித்துக்
கொள்வாயாக;நீ அலால் மற்று ஆர் உளர் -(அவ்வாறு இருப்பதற்கு)
உன்னைத் தவிர வேறு யார்தான் இருக்கின்றார்கள்?அயர்ந்தான் அல்லன் -
சுக்கிரீவன் தான் சொன்ன சொல்லில் தளர்ந்து விடவில்லை;உலகம் எங்கும்
-
(வானர சேனை களைத் திரட்ட) உலகத்தின் எல்லா இடங்களிலும்;வேறு
வேறு தூதரை -
தனித் தனியே வானரத் தூதர்களை;விடுத்து -
அனுப்பிவைத்து;அவ் எல்லை -அந்த இடங்களிலிருந்து;ஊறுமா நோக்கி
-
அச் சேனைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக்கொண்டு;தாழ்த்தான் -
தாமதித்திருக்கின்றான்;உதவி மாறு உதவி -(நீங்கள் அச் சுக்கிரீ வனுக்குச்)
செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்று;உண்டோ -செய்வ தற்கு உள்ளதோ
(இல்லை).

     சிறியவர் தீமை செய்தால் அதைப் பொறுப்பது பெரியவர் கடனாகும்.
சுக்கிரீவன் செல்வ வாழ்க்கை முதலியவற்றால் மயங்கியுள்ளான் என்று
கருதுமாறு இருந்தாலும், அவன் உங்களது உதவியை மறக்கவில்லை;
அங்கங்கே தூதரை அனுப்பி வானர சேனையின் வருகையை
எதிர்பார்த்துள்ளான்; அதனால் தாமதித்து இருக்கின்றான் என்று தாரை
சொன்னாள்.  உதவி மாறு உதவி: 'செய்யா மற் செய்த உதவி', 'காலத்தினாற்
செய்த நன்றி' ஊறு: உறுதல் - முன்னிலை நீண்டது.  ஊறுமா றுகர ஈறு
குறைந்தது.                                                    55

4324.'ஆயிர கோடி தூதர், அரிக்
      கணம் அழைக்க, ஆணை
போயினர்'; புகுதும் நாளும்
     புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் நல்ல நீரே
      தணிதிரால்; தருமம் அஃதால்;
தீயன செய்யார் ஆயின், யாவரே
      செறுநர் ஆவார்?

     ஆயிர கோடி தூதர் -ஆயிரங் கோடியளவுள்ள எண்ணற்ற தூதர்கள்;
அரிக் கணம் அழைப்ப -
வானரங்களின் கூட்டத்தை அழைத்து வரும்
பொருட்டு;ஆணை போயினர் -(சுக்கிரீவன்) கட்ட ளைப்படி (உலகெங்கும்)
போயிருக்கின்றார்கள்;புகுதும் நாளும் புகுந்தது - (அவ் வானர சேனையும்)
வந்துசேர வேண்டிய காலமும் நெருங்கியது;புகல் புக்கோர்க்கு -சரணம்
அடைந்தவர்களுக்கு;தாயினும் இனிய நீரே -பெற்ற தாயைக் காட்டிலும்
அன்பு காட்டும் நீங்களே;தணிதிர் -கோபத்தைத் தணிப்பீராக;அஃது
தருமம் -
அவ்வாறு