| | வெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருக்கவீட்டீர்; உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ? இம்மையே வறுமை எய்தி, இருமையும் இழப்பர் அன்றே?' |
செம்மை சேர் உள்ளத்தீர்கள் -நேர்மையான சிறந்த மனத்தை யுடையவர்களான நீங்கள்;செய்த பேருதவி -(சுக்கிரீவனுக்குச்) செய்த பெரிய உதவி;தீரா -(என்றென்றும்) அழியாமல் இருக்கும்படி;வெம்மைசேர் பகையும் மாற்றி -மிகக் கடுமையான பகைவனையும் அழித்து;அரசு வீற்றிருக்கவிட்டீர் -அரசாட்சியைப் பெற்றுச் சிறப்பாக அமரும்படி செய்துவிட்டீர்கள்;உம்மையே -(உங்களால் உதவி பெற்றவர்) உங்களையே; இகழ்வர் என்னின் -புறக்கணிப்பார்களானால்;எளிமையாய் -இழிந்த குணத்தோடு பொருந்தி;ஒழிவது ஒன்றோ -பெருமை குலைவது மாத்திரமோ; இம்மையே வறுமை எய்தி -இப்பிறப்பிலேயே வறுமையடைந்து; இருமையும்-இம்மை மறுமைப் பயன்களாகிய இரண்டையும்;இழப்பர் அன்றே -இழந்துவிடு வார்களன்றோ? செய்த நன்றியை மறந்தவர் இம்மையில் செல்வமும் புகழும் அழிந்து, மறுமையில் நற்கதி பெறாது நரகத்தையும் அடைவர் என்பது. பகை - பண்பாகுபெயர். (இம்மையே - தேற்றேகாரம். வீறு - வேறொருவர்க்கு இல்லாத தனிச் சிறப்பு. 58 | 4327. | 'ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின், வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லினும் மிக்கது உண்டோ? தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே பூண்டு நின்று உய்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.' |
ஆண்டு போர் வாலி -அப்பொழுது போரில் வல்ல வாலியின்; ஆற்றல் மாற்றியது -வலிமையை வதைத்தது (வாலியைக் கொன்றது) அம்பு ஒன்று -(நீங்கள் ஏவிய) பாணம் ஒன்றே;ஆயின் துணைவர் வேண்டுமோ -என்றால், (பகைவரையழிக்க) உங்களுக்கு வேறு துணை வேண்டுமோ? நும்பால் வில்லினும் -உங்களிடமுள்ள வில்லைக் காட்டிலும்;மிக்கது உண்டோ -சிறந்த ஒரு துணையும் உள்ளதோ?தேவியைத் தேண்டுவார் - சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் காண்பாரை மட்டும்;தேடுகின்றீர் - நாடுகின்றீர் (அவ்வளவுதான்);நும் கழல் -உங்கள் திருவடிகளை; புகுந்துளோரும் -சரணடைந்துள்ளவரான சுக்கிரீவன் |