பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 449

 வெம்மை சேர் பகையும்
      மாற்றி, அரசு வீற்றிருக்கவீட்டீர்;
உம்மையே இகழ்வர் என்னின்,
      எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி,
     இருமையும் இழப்பர் அன்றே?'

     செம்மை சேர் உள்ளத்தீர்கள் -நேர்மையான சிறந்த மனத்தை
யுடையவர்களான நீங்கள்;செய்த பேருதவி -(சுக்கிரீவனுக்குச்) செய்த
பெரிய உதவி;தீரா -(என்றென்றும்) அழியாமல் இருக்கும்படி;வெம்மைசேர்
பகையும் மாற்றி -
மிகக் கடுமையான பகைவனையும் அழித்து;அரசு
வீற்றிருக்கவிட்டீர் -
அரசாட்சியைப் பெற்றுச் சிறப்பாக அமரும்படி
செய்துவிட்டீர்கள்;உம்மையே -(உங்களால் உதவி  பெற்றவர்) உங்களையே;
இகழ்வர் என்னின் -
புறக்கணிப்பார்களானால்;எளிமையாய் -இழிந்த
குணத்தோடு பொருந்தி;ஒழிவது ஒன்றோ -பெருமை குலைவது மாத்திரமோ;
இம்மையே வறுமை எய்தி -
இப்பிறப்பிலேயே வறுமையடைந்து;
இருமையும்-
இம்மை மறுமைப் பயன்களாகிய இரண்டையும்;இழப்பர்
அன்றே -
இழந்துவிடு வார்களன்றோ?

     செய்த நன்றியை மறந்தவர் இம்மையில் செல்வமும் புகழும் அழிந்து,
மறுமையில் நற்கதி பெறாது நரகத்தையும் அடைவர் என்பது.  பகை -
பண்பாகுபெயர்.  (இம்மையே - தேற்றேகாரம்.  வீறு - வேறொருவர்க்கு
இல்லாத தனிச் சிறப்பு.                                          58

4327.'ஆண்டு போர் வாலி ஆற்றல்
      மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்?
      வில்லினும் மிக்கது உண்டோ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை;
      அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்தற்பாலார்,
      நும் கழல் புகுந்துளோரும்.'

     ஆண்டு போர் வாலி -அப்பொழுது போரில் வல்ல வாலியின்;
ஆற்றல் மாற்றியது -
வலிமையை வதைத்தது (வாலியைக் கொன்றது) அம்பு
ஒன்று -
(நீங்கள் ஏவிய) பாணம் ஒன்றே;ஆயின் துணைவர் வேண்டுமோ
-
என்றால், (பகைவரையழிக்க) உங்களுக்கு வேறு துணை வேண்டுமோ?
நும்பால் வில்லினும் -உங்களிடமுள்ள வில்லைக் காட்டிலும்;மிக்கது
உண்டோ -
சிறந்த ஒரு துணையும் உள்ளதோ?தேவியைத் தேண்டுவார் -
சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் காண்பாரை மட்டும்;தேடுகின்றீர் -
நாடுகின்றீர் (அவ்வளவுதான்);நும் கழல் -உங்கள் திருவடிகளை;
புகுந்துளோரும் -
சரணடைந்துள்ளவரான சுக்கிரீவன்