முதலானோரும்;அதனைச் செவ்வே பூண்டு நின்று -அப் பணியை நல்ல முறையில் ஏற்றுக் கொண்டு செம்மையாகச் செய்து;உய்தற் பாலார் - ஈடேறக் கடமைப்பட்டவராவார். உங்களுக்குச் சீதையுள்ள இடத்தைத் தேடியறியத் துணை வேண்டுமெயல்லாமல் பகை வெல்லத் துணை தேவையில்லை. ஆகவே, அப் பணியைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டவர் சுக்கிரீவன் முதலியோரே என்றாள் தாரை. தேண்டுவார் - தேடுதல் விரித்தல்விகாரம். 59 இலக்குவன்பால் அனுமன் வருதல் | 4328. | என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு, நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான், நின்றனன்; நிற்றலொடும், 'நீத்தனன் முனிவு' என்று உன்னி, வன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான். |
என்று அவள் உரைத்த -இவ்வாறு அத்தாரை சொன்ன;மாற்றம் யாவையும் -வார்த்தைகளையெல்லாம்;இனிது கேட்டு -கவனமாகக் கேட்டு; நன்று உணர் -தெளிவாக உணர்ந்த;கேள்வியாளன் -(வேதக்) கேள்வியறிவுடைய இலக்குவன்;அருள்வர -கருணை மேலிட;நாண் உள்கொண்டான் நின்றனன் -வெட்கத்தை மனத்தில் கொண்டவனாய் நின்றான்;நிற்றலோடும் 'முனிவு நீத்தனன்' - (அவ்வாறு) நின்ற அளவில் 'இவன் கோபத்தை நீக்கிவிட்டான்';என்று உன்னா -என்று கருதி; வன்துணை -வலிய போர்த்துணையாகவுள்ள;வயிரத் திண் தோள் மாருதி -உறுதியும் பலமும் கொண்ட தோள்களையுடைய அனுமன்;மருங்கின் - (இலக்குவன்) அருகிலே;வந்தான் -வந்து சேர்ந்தான். மாற்றம் -சொல் 60 இலக்குவன் வினாவும் அனுமன் விடையும் | 4329. | வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி, 'அந்தம் இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே, முந்திய செய்கை?' என்றான். முனிவினும் முளைக்கும் அன்பான்; 'எந்தை கேட்டு அருளுக!' என்ன இயம்பினன், இயம்ப வல்லான்: |
|