பக்கம் எண் :

452கிட்கிந்தா காண்டம்

 மெய் உறு கேண்மை ஆகி,
      மேலை நாள் விளைவது ஆன
செய்கை, என் செய்கை அன்றோ?
     அன்னது சிதையும் ஆயின்,
உய் வகை எவர்க்கும் உண்டோ?
      உணர்வு மாசுண்டது அன்றோ?'

     ஐய -ஐயாவே; நும்மோடும் -உங்களுக்கும்;எங்கள் அரிக் குலத்து
அரசனோடும் -
வானரக் கூட்டமாகிய எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கும்;
மெய் உறு கேண்மை -
(ஒருவரோடு ஒருவர்க்கு) உண்மையான நட்பு;
ஆக-உண்டாகும்படி;மேலைநாள் விளைவதாய -முன்னாளில் உண்டான;
செய்கை என் செய்கை அன்றோ -
செயல் எனது செயல் அல்லவா?
அன்னது -
அந்த நட்புத் தருமம்;சிதையுமா யின் -அழியுமானால்;
உய்வகை எவர்க்கும் உண்டோ? -
(அத் தீவினை யிலிருந்து) தப்பும் வழி
இந்த உலகில் யாருக்குத்தான் உண்டு (இல்லை);உணர்வு -(அதுவல்லாமல்)
எங்கள் அறிவு யாவும்;மாசுண்டது அன்றோ -குற்றம் உடையதாகும்
அல்லவா?

     உங்கள் உதவியைப் பெற்ற நாங்கள் அறிவு கெட்டு இழிவுடைவதா
என்றான் அனுமன்.  மேலைநாள்: முன்னாள்.                         63

4332.'தேவரும், தவமும், செய்யும் நல்
      அறத் திறமும், மற்றும்
யாவையும், நீரே என்பது,
      என்வயின் கிடந்தது;  எந்தாய்!
ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ?
     அருள் உண்டு அன்றே
மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! -
      முனிவு உண்டானால்?'

     எந்தாய் -எம் தலைவனே!தவமும் -(முற்பிறப்பிலும் இப் பிறப்பிலும்
நாங்கள் செய்த) தவமும்;செய்யும் நல்லறத் திறமும் -(நாங்கள்) செய்த
சிறந்த தருமச் செயல்களும்;தேவரும் மற்றும் யாவை யும் -தேவர்களுள்
மற்றுள்ள பொருள்களும்;நீரே என்பது -(எங் களுக்கு) நீங்களே என்னும்
கருத்து;என்வயின் கிடந்தது -என்னிடம் பதிந்துள்ளது;ஆவது நிற்க -
அது அப்படியே இருக்கட்டும்;மூவகை உலகும் -மூன்று வகையான
உலகங்களையும்;காக்கும் மொய்ம்பினீர் -பாதுகாக்கும் ஆற்றல்
உடையவரே!;முனிவு உண்டானால் -(உங்களுக்கு) எங்கள் மேல் சீற்றம்
உண்டாகுமானால்;சேரும் அரண் -(நாங்கள் தப்பிச்சென்று) சேர்ந்து வாழும்
பாதுகாவல்;உண்டோ -உள்ளதோ (இல்லை);அருள் உண்டு அன்றே -
(அதற்கும்) உங்களது கருணையே கதியாக உள்ளதன்றோ?