பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 455

முயல்வார்கள்.  ஆதலால், நீ உள்ளே வந்து நீங்கள் உதவிய செல்வத்தால்
சிறப்பும் பெருமையும் பெற்றுள்ள சுக்கிரீவனைப் பார்த்து உன்  கோபத்தைத்
தணிவிப்பாய்' என்றான் அனுமன். 'உன் தம்முனைச் சார்தி': தம்முன் -
தமையன்; சுக்கிரீவன் இலக்குவனால் தமையன் முறையாகக் கருதப்படுபவன். 67

இலக்குவன் சீற்றம் தணிந்து பேசுதல்

4336.மாருதி மாற்றம் கேட்ட, மலை
      புரை வயிரத் தோளான்,
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான்,
      சிந்தை செய்தான் -
'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்;
      வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிதாகச் செய்த
      சிறுமையான்' என்னும் பெற்றி.

     மாருதி மாற்றம் கேட்ட -அனுமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட;
மலை புரை வயிரத் தோளான் -
மலையைப் போன்ற உறுதியான
தோள்களையுடைய இலக்குவன்;தீர்வினை சென்று -தோன்றி மறைகின்ற;
நின்ற சீற்றத்தான் -
சினத்தின் விடுபட்டு;ஆரியன் அருளின் -(இச்
சுக்கிரீவன்) இராமனது அருட் பார்வையிலிருந்து;தீர்ந்தான் அல்லன் -
(உண்மையாக) நீங்கினவனில்லை;பேர்வு அரிது ஆக -தன்னை விட்டு நீங்க
முடியாததும்;வந்து அடுத்த செல்வம் -தன்னை வந்து அடுத்ததும் ஆகிய
செல்வம்;செய்த -தந்த;சிறுமையான் -சிறுமையுடையவன்;என்னும்
பெற்றி -
 என்னும் இயல்பை;சிந்தை செய்தான் -மனத்தில் நினைந்தான்.

     'இச் சுக்கிரீவன் எங்களை அவமதித்தான் என்று சொல்ல இயலாது.
தவிர, தான் செசன்ன தவணைப்படி வராமல் இராமனது ஆணையை
மீறவேண்டுமென்ற எண்ணமும் இவனுக்குச் சிறிதும் இல்லை; புதிதாகக்
கிடைத்த செல்வச் செருக்கால் தான் செய்ய வேண்டிய செயலை மறந்ததனால்
ஏற்பட்டது இது' என்று அனுமன் வார்த்தையால் தெளிவடைந்த இலக்குவனின்
சினம் தணிந்தது.  தாரையும் இதே கருத்தைச் சொன்னாள்.(4325)        68

4337. அனையது கருதி, பின்னர்,
      அரிக் குலத்தவனை நோக்கி,
'நினை; ஒரு மாற்றம் இன்னே
     நிகழ்த்துவது உளது, நின்பால்;
இனையன உணர்தற்க ஏற்ற;
      எண்ணிய நீதி' என்னா,
வனை கழல் வயிரத் திண் தோள்
      மன் இளங் குமரன் சொல்வான்:

     அனையது கருதி -(இவ்வாறு) அதைப் பற்றிச் சிந்தித்து;பின்னர் -
பின்பு;வனை கழல் வயிரத் திண்தோள்-வீரக் கழல் பூண்ட கால்களையும்,