முயல்வார்கள். ஆதலால், நீ உள்ளே வந்து நீங்கள் உதவிய செல்வத்தால் சிறப்பும் பெருமையும் பெற்றுள்ள சுக்கிரீவனைப் பார்த்து உன் கோபத்தைத் தணிவிப்பாய்' என்றான் அனுமன். 'உன் தம்முனைச் சார்தி': தம்முன் - தமையன்; சுக்கிரீவன் இலக்குவனால் தமையன் முறையாகக் கருதப்படுபவன். 67 இலக்குவன் சீற்றம் தணிந்து பேசுதல் | 4336. | மாருதி மாற்றம் கேட்ட, மலை புரை வயிரத் தோளான், தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான் - 'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம் பேர்வு அரிதாகச் செய்த சிறுமையான்' என்னும் பெற்றி. |
மாருதி மாற்றம் கேட்ட -அனுமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட; மலை புரை வயிரத் தோளான் -மலையைப் போன்ற உறுதியான தோள்களையுடைய இலக்குவன்;தீர்வினை சென்று -தோன்றி மறைகின்ற; நின்ற சீற்றத்தான் -சினத்தின் விடுபட்டு;ஆரியன் அருளின் -(இச் சுக்கிரீவன்) இராமனது அருட் பார்வையிலிருந்து;தீர்ந்தான் அல்லன் - (உண்மையாக) நீங்கினவனில்லை;பேர்வு அரிது ஆக -தன்னை விட்டு நீங்க முடியாததும்;வந்து அடுத்த செல்வம் -தன்னை வந்து அடுத்ததும் ஆகிய செல்வம்;செய்த -தந்த;சிறுமையான் -சிறுமையுடையவன்;என்னும் பெற்றி - என்னும் இயல்பை;சிந்தை செய்தான் -மனத்தில் நினைந்தான். 'இச் சுக்கிரீவன் எங்களை அவமதித்தான் என்று சொல்ல இயலாது. தவிர, தான் செசன்ன தவணைப்படி வராமல் இராமனது ஆணையை மீறவேண்டுமென்ற எண்ணமும் இவனுக்குச் சிறிதும் இல்லை; புதிதாகக் கிடைத்த செல்வச் செருக்கால் தான் செய்ய வேண்டிய செயலை மறந்ததனால் ஏற்பட்டது இது' என்று அனுமன் வார்த்தையால் தெளிவடைந்த இலக்குவனின் சினம் தணிந்தது. தாரையும் இதே கருத்தைச் சொன்னாள்.(4325) 68 | 4337. | அனையது கருதி, பின்னர், அரிக் குலத்தவனை நோக்கி, 'நினை; ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது, நின்பால்; இனையன உணர்தற்க ஏற்ற; எண்ணிய நீதி' என்னா, வனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங் குமரன் சொல்வான்: |
அனையது கருதி -(இவ்வாறு) அதைப் பற்றிச் சிந்தித்து;பின்னர் - பின்பு;வனை கழல் வயிரத் திண்தோள்-வீரக் கழல் பூண்ட கால்களையும், |