மிக்க வலிமையான தோள்களையும் உடைய;மன் இளங்கும ரன் - இளவரசனான இலக்குவன்;அரிக்குலத்தவனை நோக்கி -வானர குலத்தைச் சேர்ந்த அனுமனைப் பார்த்து; இன்னே நின்பால் -இப்பொழுதே உன்னிடம்;ஒரு மாற்றம் நிகழ்த்துவது உளது -(நான்) ஒன்று கூற வேண்டியுள்ளது;இனையன -கூறும் இந்த வார்த்தைகள்;உணர்தற்கு ஏற்ற-(நீ) உணர்ந்து அறிவதற்குத் தகுதியுடையவை;எண் ணிய நீதி - (இவ்வார்த்தைகள்) எண்ணித் துணிந்த நீதியின்பாற் பட் டவையாகும்; என்னாசொல்வான் -என்று சொல்லத் தொடங்கினான். அனையது - சுக்கிரீவன் இராமனது ஆணையை மீறாதிருந்தம், அவனுக்குக் கிடைத்த செல்வம் சிறுமை செய்தது என்பது. செல்வம் பெற்றவர்க்குப் பல்வேறு மாறாட்டங்கள் நிகழக் கூடும்; அதனால் பல தீங்குகள் விளைய வாய்ப்புள்ளது. கழல் - தானியாகுபெயர். 69 | 4338. | 'தேவியைக் குறித்துச் செற்ற சீற்றமும், மானத் தீயும், ஆவியைக் குறித்து நின்றது, ஐயனை; அதனைக் கண்டேன்; கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடி, பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன். |
தேவியைக் குறித்து -சீதையை (இராவணன் கவர்ந்து சென் றதை)க் குறித்து;செற்ற சீற்றமும் -கறுவு கொண்ட சினமும்;மானத் தீயும் - மானமாகிய நெருப்பும்;ஐயனை ஆவியை -இராமனது உயிரை;குறித்து நின்றது -பற்றி வருத்தி நின்றன;அதனைக் கண்டேன் -அவ்வாறு வருத்துவதை (நேரிலே) கண்ட நான்;கோ இயல் தருமம் நீங்க - அரசர்களுக்குரிய தருமம் அழிய;கொடுமையோடு உறவு கூடி - கொடுந்தன்மையோடு உறவு கொண்டாடி;பாவியர்க்கு ஏற்ற செய்கை - கொடிய பாவியர்க்குரிய செயல்களை;கருதுவன் -செய்யக் கருதியுள்ளேன்; பழியும் பாரேன் -(அதனால் எனக்கு வரக் கூடிய) பழியையும் சிறிதும் கருதமாட்டேன். இராவணன் சீதையைக் கவர்ந்த செயல் இராமனை மிக வருத்தியது. அதனை நேரில் கண்ட இலக்குவன் தனக்கு நேரும் சீற்றத்தையும்; அதன் விளைவுகளையும் எடுத்துரைக்கின்றான். காலம் பார்த்துச் சினம் ஆறியிருத்தல் அரசனுக்குக் கடமையாயிருக்க, இராமனுக்கு நேர்ந்த துன்பங்களைக் கண்டு, ஆற்றாமல் இலக்குவன் 'கோவியல் தருமம் நீங்க... பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்' என்றான். 70 | 4339. | 'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று, |
|