பக்கம் எண் :

456கிட்கிந்தா காண்டம்

மிக்க வலிமையான தோள்களையும் உடைய;மன் இளங்கும ரன் -
இளவரசனான இலக்குவன்;அரிக்குலத்தவனை நோக்கி -வானர குலத்தைச்
சேர்ந்த அனுமனைப் பார்த்து; இன்னே நின்பால் -இப்பொழுதே
உன்னிடம்;ஒரு மாற்றம் நிகழ்த்துவது உளது -(நான்) ஒன்று கூற
வேண்டியுள்ளது;இனையன -கூறும் இந்த வார்த்தைகள்;உணர்தற்கு
ஏற்ற-
(நீ) உணர்ந்து அறிவதற்குத் தகுதியுடையவை;எண் ணிய நீதி -
(இவ்வார்த்தைகள்) எண்ணித் துணிந்த நீதியின்பாற் பட் டவையாகும்;
என்னாசொல்வான் -என்று சொல்லத் தொடங்கினான்.

     அனையது - சுக்கிரீவன் இராமனது ஆணையை மீறாதிருந்தம்,
அவனுக்குக் கிடைத்த செல்வம் சிறுமை செய்தது என்பது.  செல்வம்
பெற்றவர்க்குப் பல்வேறு மாறாட்டங்கள் நிகழக் கூடும்; அதனால் பல தீங்குகள்
விளைய வாய்ப்புள்ளது.  கழல் - தானியாகுபெயர்.                    69

4338.'தேவியைக் குறித்துச் செற்ற
      சீற்றமும், மானத் தீயும்,
ஆவியைக் குறித்து நின்றது,
      ஐயனை; அதனைக் கண்டேன்;
கோ இயல் தருமம் நீங்க,
      கொடுமையோடு உறவு கூடி,
பாவியர்க்கு ஏற்ற செய்கை
      கருதுவன்; பழியும் பாரேன்.

     தேவியைக் குறித்து -சீதையை (இராவணன் கவர்ந்து சென் றதை)க்
குறித்து;செற்ற சீற்றமும் -கறுவு கொண்ட சினமும்;மானத் தீயும் -
மானமாகிய நெருப்பும்;ஐயனை ஆவியை -இராமனது உயிரை;குறித்து
நின்றது -
பற்றி வருத்தி நின்றன;அதனைக் கண்டேன் -அவ்வாறு
வருத்துவதை (நேரிலே) கண்ட நான்;கோ இயல் தருமம் நீங்க -
அரசர்களுக்குரிய தருமம் அழிய;கொடுமையோடு உறவு கூடி -
கொடுந்தன்மையோடு உறவு கொண்டாடி;பாவியர்க்கு ஏற்ற செய்கை -
கொடிய பாவியர்க்குரிய செயல்களை;கருதுவன் -செய்யக் கருதியுள்ளேன்;
பழியும் பாரேன் -
(அதனால் எனக்கு வரக் கூடிய) பழியையும் சிறிதும்
கருதமாட்டேன்.

     இராவணன் சீதையைக் கவர்ந்த செயல் இராமனை மிக வருத்தியது.
அதனை நேரில் கண்ட இலக்குவன் தனக்கு நேரும் சீற்றத்தையும்; அதன்
விளைவுகளையும் எடுத்துரைக்கின்றான்.  காலம் பார்த்துச் சினம்
ஆறியிருத்தல் அரசனுக்குக் கடமையாயிருக்க, இராமனுக்கு நேர்ந்த
துன்பங்களைக் கண்டு, ஆற்றாமல் இலக்குவன் 'கோவியல் தருமம் நீங்க...
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்' என்றான்.                     70

4339.'ஆயினும், என்னை யானே ஆற்றி
      நின்று, ஆவி உற்று,