| | ஆன்ற நூல் அறிஞ! போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை; ஏன்றது முடியேம்என்னின், இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம் சான்று இனி அறனே; போந்து, உன் தம்முனைச் சார்தி' என்றான். |
தோன்றல் -காண்பதற்கு இனியவனான இலக்குவன்;அஃது உரைத்தலோடும் -அவ் வார்த்தைகளைச் சொன்னவுடனே;மாருதி தொழுது -வாயு மைந்தனான அனுமன் (இலக்குவனை) வணங்கி;தொல்லை ஆன்ற நூல் அறிஞ -பழமையான சிறந்த நூல்களை அறிந்தவனே;போன பொருள் -நடந்து முடிந்த செய்திகளை;மனத்து அடைப்பாய் அல்லை -மனத்தில் கொள்ளாதிருப்பாயாக;ஏன்றது முடியேம் என்னின் -(நாங்கள்) ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாது விடுத்தோமாயின்;இறத்தும் - உயிர்விடக் கடவோம்;இத் திறத்துக்கு எல்லாம் -இந்த வகைச் செய்திகளுக்கெல்லாம்;இனி அறனே சான்று -இனிச் சாட்சியாக இருப்பது தருமமே;போந்து -உள்ளே வந்து;உன் தம்முனை -உனக்கு அண்ணன் முறையாகும் சுக்கிரீவனிடம்;சார்தி என்றான் -சோர்வாய் என்று சொன்னான். அனுமன் இலக்குவனது சினத்தைத் தணிக்க விரும்பிச் 'சீதையைத் தேடுதல் முதலான செயல்களைத் தவறாது செய்துமுடிப்போம்; அவ்வாறு முடியாவிட்டால் நாங்கள் இறந்துபடுவோம்; இச் செயலுக்கு தருமமே சாட்சி' என்றான் என்பது. சான்று இனி அறனே: நாங்கள் அறம் திறம்பினோம் என்று நீங்கள் இனியும் எங்களைக் கொல்ல வேண்டா. ஏனென்றால் அறமே எங்களைக் கொன்று விடும். மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் மற்றவன் கேடு (குறள் - 204) ஆன்ற - சான்ற என்பதன் மரூஉ. தோன்றல் - பெருமையாளன். ஆண்பாற் சிறப்புப் பெயர். 75 இலக்குவன் அனுமனொடு செல்லுதல் | 4344. | 'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது;முயற்றுங்காறும், இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம்' எனக் கூறி, அன்னது ஓர் அமைதியான்தன் அருள் சிறிது அறிவான் நோக்கி, பொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான். |
பொன்னின் வார் சிலையினானும் -பொன்னால் செய்யப் பெற்ற வில்லைத் தாங்கிய இலக்குவனும் (அனுமன் நோக்கி);முன்னும் |