முயன்றது - 'முன்பும் நாங்கள் மேற்கொண்ட முயற்சியும்;நீ சொல்லிற்று அன்றோ -நீ சொல்லியது தானே;இன்னும் -இனிமேலும்; முயற்றுங்காறும் -முயற்சி மேற்கொள்ளுங் காலத்தும்; நீ இசைத்த -நீ சொல்லியதையே;செய்வான் இயைந்தனம் -செய்வதறகு உடன் படுகிறோம்'; என்று கூறி -என்று சொல்லி;அன்னது ஓர் அமைதி யான்தன் -(மேலே கூறப்பட்ட) நிலையையுடையவனான சுக்கிரீவனது;அருள் சிறிது அறிவான் நோக்கி - மனநிலையையும் சிறிது தெரிந்து கொள்ளக் கருதி;மாருதியோடும் போனான் - அனுமனுடன் சென்றான். சுக்கிரீவன் கார்காலம் நீங்கியவுடன் சீதையைத் தேடுவதற்கு முயலாமல் அந்தப்புரத்தில் உறங்கிக்கிடக்கின்றமையால் அவன் 'அன்னது ஓர் அமைதியான்' எனப்பட்டான். அருள் - சுக்கிரீவன் எங்களிடம் அன்பு காட்டும் விதம். பொன்னின் வார்சிலை - அழகானதும் நீண்டதுமான வில் எனினும் அமையும். 76 தாரை திரும்பிப் போதல் | 4345. | அயில் விழி, குமுதச் செவ் வாய், சிலை நுதல், அன்னப் போக்கின், மயில் இயல், கொடித் தேர் அல்குல், மணி நகை, திணி வேய் மென்தோள் குயில்மொழி, கலசக்கொங்கை, மின்இடை, குமிழ் ஏர் மூக்கின், புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள். |
தாரை -தாரையானவள்;அயில்விழி -வேல்போன்ற கண்களையும்; குமுதச் செவ்வாய் -செவ்வாம்பல் மலரையொத்த சிவந்த வாயையும்;சிலை நுதல் -வில்லைப் போன்ற புருவத்தையும்;அன்னப் போக்கின் -அன்ன நடையை ஒத்த நடையையும்;மயில் இயல் -மயிலைப் போன்ற சாயலையும்; கொடித் தேர் அல்குல் -கொடிகளை யுடைய தேர்த்தட்டுப் போன்ற அல்குலையும்;மணிநகை -முத்துப் போன்ற பற்களையும்;திணிவேய் மென்தோள் -வலிய மூங்கில் போன்ற மெல்லி தோள்களையும்;குயில் மொழி-குயிலின் குரலையொத்த சொல்லையும்;கலசக் கொங்கை - பொற்கலசத்தைப் போன்ற முலைகளையும்;மின் இடை -மின்னல் போன்ற இடையையும்;குமிழ் ஏர்மூக்கின் -குமிழ மலர்போன்ற எடுப்பான மூக்கையும்;புயல் இயல் கூந்தல் - கருமேகத்தையொத்த கரிய கூந்தலையும் உடைய;மாதர் குழாத்தோடும் -மகளிர் கூட்டத்துடனே;போனாள் - திரும்பிச் சென்றாள். உவமையணி. தாரையுடன் சென்ற மகளிர்க்கே இவ்வனப்புகள் அனைத்தையும் கூறித் தாரைக்கு ஒன்றும் அடைமொழி கூறாமல் அன்னவளின் கைம்மைக் |