கோலமும், கற்புநிலையும் உணர்த்தப்படுகின்றன. முத்து, நவமணிகளுள் ஒன்றாதலால் மணி எனப்பட்டது. 77 அங்கதன் இலக்குவனை வணங்கிச் சுக்கிரீவனிடம் செல்லுதல் | 4346. | வல்ல மந்திரியரோடும், வாலி காதலனும், மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்; வில்லியும் அவனை நோக்கி, 'விரைவின் என் வரவு, வீர! சொல்லுதி நுந்தைக்கு' என்றான்;' 'நன்று' என, தொழுது போனான். |
வாலி காதலனும் -வாலியின் மகனான அங்கதனும்;வல்ல மந் திரியரோடும் -நீதிமுறைகளிலும் அரசியல் நூல்களிலும் தேர்ச்சி பெற்ற அமைச்சர்களுடன் (வந்து);மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன - வீரனான இலக்குவனுடைய அகவிதழ் கொண்ட அழகிய செந்தாமரை மலர்போன்ற;அடி பணிந்து -திருவடிகளில் வீழ்ந்து வணங்கி;அச்சம் தீர்ந்தான் -(இலக்குவனால் என்ன நேரிடுமோ என்று எண்ணிய) பயம் நீங்கப் பெற்றான்;வில்லியும் அவனை நோக்கி -வில்வீரனான இலக்குவனும் அந்த அங்கதனைப் பார்த்து;வீர என் வரவு -'வீரனே! எனது வருகையை; நுந்தைக்கு விரைவின் சொல்லுதி -உன் சிற்றப்பனாகிய சுக்கிரீவனுக்கு விரைந்து சென்று கூறுவாய்;என்றான் -என்று மொழிந்தான் (அது கேட்டு); நன்ற என -நல்லது என்று சொல்லி;தொழுது போனான் -- (அவ் இலக்குவனை) வணங்கிப் போனான். 78 இலக்குவன் சினத்திற்குக் காரணம் என்ன எனச்சுக்கிரீவன் வினவுதல் | 4347. | போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம் கொள் பாதம் தான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, 'தடக் கை வீர! மானவற்கு இளையோன் வந்து, உன் வாசலின் புறத்தான்; சீற்றம் மீன் உயர் வேலைமேலும் பெரிது; இது விளைந்தது' என்றான். |
போனபின் -இலக்குவனைவிட்டு (அங்கதன்) நீங்கிச்சென்ற பிறகு; தாதை கோயில் புக்கு -சிற்றப்பனாகிய சுக்கிரீவனது அரண்மனைக்குள் |