பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 463

புகுந்து;அவன் பொலம்கொள் பாதம் -அச் சுக்கிரீவனுடைய
பொன்போன்ற (அழகான) பாதகங்களை;தான் உறப் பற்றி -தான் நன்றாகப்
பிடித்துக் கொண்டு;முற்றும் தைவந்து -முழுவதும் தடவி (துயிலெழுப்பி);
தடக்கை வீர -
நீண்ட கைகளையுடைய வீரனே;மானவற்கு இளையோன்
வந்து -
இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் வந்து;உன் வாசலின்
புறத்தான் -
உனது அரண்மனை வாயில் வெளியிலே நிற்கின்றான்;சீற்றம் -
(அவன் இப்பொழுது கொண்டுள்ள) சினமானது;மீன் உயர் வேலை மேலும்
பெரிது -
மீன்கள் நிறைந்துள்ள கடலைக் காட்டிலும் பெரியது;இது
விளைந்தது -
இது நடந்த செய்தி;என்றான் -என்று கூறினான்.

     பொலம் - பொன், அழகு. தைவருதல் - தடவுதல். மானவன் -
பெருமையுள்ளவன்.                                              79

4348. அறிவுற்று, மகளிர் வெள்ளம்
      அலமரும் அமலை நோக்கிப்
பிறிவு உற்ற மயக்கத்தால், முந்து
      உற்றது ஓர் பெற்றி ஒரான்,
'செறி பொன் - தார் அலங்கல்
      வீர! செய்திலம் குற்றம்
;நம்மைக்
கறுவுற்ற பொருளுக்கு என்னோ
      காரணம் கண்டது?' என்றான்.

     மகளிர் வெள்ளம் அழிவுற்று -(அங்கதன்) அங்கு வந்ததைப்
பெண்டிர் கூட்டம் அறிந்து;அலமரும் அமலை நோக்கி -கலங்கி ஆர
வாரம் இடுதலைக் கண்டு;பிறிவு உற்ற மயக்கத்தால் -தன் மயக்கத்தி
லிருந்து விடுதலையடைந்து; முந்து உற்றது ஓர் பெற்றி -முன்பு (அங்க தன்
வந்து எழுப்பியது போன்ற) நடந்த நிகழ்ச்சிகளின் தன்மையை;ஓரான் -
உணராதவனாய் (அங்கதன் கூறியதற்க விடையாக அவனை நோக்கி);
செறிபொன் தார் அலங்கல் வீர -
நிறைந்த பொன்மாலையும் மலர்
மாலையும் அணிந்த வீரனே!குற்றம் செய்திலம் -'நாம் எந்தக் குற்றமும்
செய்யவில்லையே, (அவ்வாறு இருக்க);நம்மைக் கறுவுற்ற பொருளுக்கு -
நம் மீது இலக்குவன் சினம் கொண்டதற்கு;காரணம் கண்டது என்னோ -
காரணமாகக் காணப் பட்டது எது';என்றான் - என்று கேட்டான்.

     அலமரம் - வருந்துதல் எனினும் அமையும் 'அலமரல் தெருமரம்
ஆயிரண்டும் சுழற்சி' - (தொல் - சொல் - 314).  அமலை - ஆரவாரம்.
கறுவுறல் - வெகுளல். வெள்ளம் - பேரெண்ணைக் குறிக்கும் (பெருந்திரள்). 80

அங்கதன் கூற்று

4349.'  ''இயைந்த நாள் எந்தை, நீ
      சென்று எய்தலை; செல்வம் எய்தி