புகுந்து;அவன் பொலம்கொள் பாதம் -அச் சுக்கிரீவனுடைய பொன்போன்ற (அழகான) பாதகங்களை;தான் உறப் பற்றி -தான் நன்றாகப் பிடித்துக் கொண்டு;முற்றும் தைவந்து -முழுவதும் தடவி (துயிலெழுப்பி); தடக்கை வீர -நீண்ட கைகளையுடைய வீரனே;மானவற்கு இளையோன் வந்து -இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் வந்து;உன் வாசலின் புறத்தான் -உனது அரண்மனை வாயில் வெளியிலே நிற்கின்றான்;சீற்றம் - (அவன் இப்பொழுது கொண்டுள்ள) சினமானது;மீன் உயர் வேலை மேலும் பெரிது -மீன்கள் நிறைந்துள்ள கடலைக் காட்டிலும் பெரியது;இது விளைந்தது -இது நடந்த செய்தி;என்றான் -என்று கூறினான். பொலம் - பொன், அழகு. தைவருதல் - தடவுதல். மானவன் - பெருமையுள்ளவன். 79 | 4348. | அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப் பிறிவு உற்ற மயக்கத்தால், முந்து உற்றது ஓர் பெற்றி ஒரான், 'செறி பொன் - தார் அலங்கல் வீர! செய்திலம் குற்றம்;நம்மைக் கறுவுற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது?' என்றான். |
மகளிர் வெள்ளம் அழிவுற்று -(அங்கதன்) அங்கு வந்ததைப் பெண்டிர் கூட்டம் அறிந்து;அலமரும் அமலை நோக்கி -கலங்கி ஆர வாரம் இடுதலைக் கண்டு;பிறிவு உற்ற மயக்கத்தால் -தன் மயக்கத்தி லிருந்து விடுதலையடைந்து; முந்து உற்றது ஓர் பெற்றி -முன்பு (அங்க தன் வந்து எழுப்பியது போன்ற) நடந்த நிகழ்ச்சிகளின் தன்மையை;ஓரான் - உணராதவனாய் (அங்கதன் கூறியதற்க விடையாக அவனை நோக்கி); செறிபொன் தார் அலங்கல் வீர -நிறைந்த பொன்மாலையும் மலர் மாலையும் அணிந்த வீரனே!குற்றம் செய்திலம் -'நாம் எந்தக் குற்றமும் செய்யவில்லையே, (அவ்வாறு இருக்க);நம்மைக் கறுவுற்ற பொருளுக்கு - நம் மீது இலக்குவன் சினம் கொண்டதற்கு;காரணம் கண்டது என்னோ - காரணமாகக் காணப் பட்டது எது';என்றான் - என்று கேட்டான். அலமரம் - வருந்துதல் எனினும் அமையும் 'அலமரல் தெருமரம் ஆயிரண்டும் சுழற்சி' - (தொல் - சொல் - 314). அமலை - ஆரவாரம். கறுவுறல் - வெகுளல். வெள்ளம் - பேரெண்ணைக் குறிக்கும் (பெருந்திரள்). 80 அங்கதன் கூற்று | 4349. | ' ''இயைந்த நாள் எந்தை, நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி |
|