பக்கம் எண் :

464கிட்கிந்தா காண்டம்

 வியந்தனை; உதவி கொன்றாய்; மெய்
      இலை'' என்ன வீங்கி,
உயர்ந்தது சீற்றம்; மற்று, ஈது
      உற்றது செய்கை; முற்றும்
நயம் தெரி அனுமன்
      வேண்ட, நல்கினன், நம்மை இன்னும்.

     எந்தை -(அப்போது அங்கதன் சுக்கிரீவனை நோக்கி) என் தந்தையே!
இயைந்த நாள் எல்லை -
(படையைத் திரட்டி வருவதாக முன்பு) ஏற்றுக்
கொண்ட காலத் தவணையில்;நீ சென்று எய்தலை -(படைகளோடு)
இராமனிடம் நீ போய்ச் சேரவில்லை;செல்வம் எய்தி வியந்தனை -பெருஞ்
செல்வத்தைப் பெற்றுச் செருக்குற்றாய்;உதவி கொன்றாய் -(அவர்கள்
செய்த) பேருதவியை மறந்துவிட்டாய்;மெய் இலை -சிறிதும்
உண்மையில்லாதவனாக ஆனாய்;என்னச் சீற்றம் வீங்கி உயர்ந்தது -
என்பதால் (இலக்குவனுக்குக்) கோபம் மிகுதியும் மூண்டது;ஈறு உற்றது
செய்கை -
 இதுதான் நடந்தசெயல்;நயம் தெரி அனுமன் -பக்குவம்
அறிந்த அனுமன்;வேண்ட -வேண்டிக் கொண்டதால்;நம்மை இன்னும்
நல்கினன் -
(அந்த இலக்குவன்) நம்மை இன்னும் உயிரோடு இருக்குமாறு
அருள்புரிந்துள்ளான்.

     அனுமன் இலக்குவனை வேண்டியிராவிடில் அப்போதே நாம்
அனைவரும் இலக்குவனால் கொல்லப்பட்டிருப்போம் என்றவாறு.  முற்றும்
நயம்தெரி அனுமன் - முன்பு தாரையைக் கொண்டு இலக்குவனது சினத்தைத்
தணித்துப் பின்னர் இனிய சொற்களால் வேண்டிக் கொண்டதைக் குறித்தது.
நயம் - பக்குவம்.                                               81

4350.'வருகின்ற வேகம் நோக்கி,
      வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில் பொற்
      கதவு அடைத்து, கற் குன்று
அருகு ஒன்றும் இல்லா வண்ணம்
     வாங்கினர் அடுக்கி, மற்றும்
தெரிகின்ற சினத்தீப் பொங்க, செருச்
      செய்வான் செருக்கி நின்றார்.

     வானர வீரர் -வானர வீரர்கள்;வருகின்ற வேகம் நோக்கி -
இலக்குவன் வரும் வேகத்தைப் பார்த்து;வானைப் பொருகின்ற -
வானத்தைச் சென்று தொடுகின்ற;நகர வாயில் -(கிட்கிந்தா) நகரத்தின்
வாயிலில் உள்ள;பொன் கதவு அடைத்து -பொன்னாலாகிய கதவுகளைச்
சாத்திக் கொண்டு;அருகு ஒன்றும் இல்லா வண்ணம் -பக்கத்தில் ஒரு சிறு
குன்றுகூட இல்லாதபடி;கற்குன்று வாங்கினர் அடுக்கி -கல்
மலைகளையெல்லாம் எடுத்துவந்து (அவ் வாயிலில்)