பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 465

ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி;மற்றும் -மேலும்;தெரிகின்ற சினத்தீப்
பொங்க -
வெளிப்படுகின்ற கோபத் தீயானது கொதித்தெழு;செருச்
செய்வான் -
(இலக்குவனோடு) போர் செய்யும் பொருட்டு;செருக்கி
நின்றார்-
செருக்குக் கொண்டு நின்றார்கள்.

     வானர வீரர்கள் நகரவாயிலின் பொற் கதவுகளைத் தாளிட்டு அவற்றின்
அருகில் பல் சிறு குன்றுகளை அடுக்கிவைத்த செய்தி முன் கூறப்பட்டது.
(4301) அதனை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கிறான்.  வானைப்
பொருகின்ற நகர வாயில் - உயர்வுநவிற்சியணி.                      82

4351.'ஆண்தகை, அதனை நோக்கி, அம்
      மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு
      வடக்குச் செல்ல
நீண்ட கல் மதிலும், கொற்ற
      வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப்
      பொடியொடும் கெழீஇய அன்றே.

     ஆண்தகை -ஆடவருள் சிறந்தவனான இலக்குவன்;அதனை நோக்கி
-
வானரர்களின் அந்தச் செயலைப் பார்த்து;அம் கமல மலர்த் தாளால்
தீண்டினன் -
அழகிய செந்தாமரை மலர் போன்ற தனது காலால் (அடைத்த
வாயில் கதவை) உதைத்தான்;தீண்டாமுன்னம் -(அத்திருவடி) படுவதற்கு
முன்பே;தெற்கொடு வடக்குச் செல்ல -தென்வடலாகப் பரவி;நீண்ட கல்
மதிலும் -
நீண்டுள்ள கல்லால் ஆகிய மதில்களும்;கொற்ற வாயிலும் -
வெற்றி பொருந்திய நகரவாயிலும்;நிரைத்த குன்றும் -வரிசையாக அடுக்கி
வைத்த குன்றுகளும்;தகர்ந்து கீண்டன -உடைந்து சிதறினவாகி;பின்னை -
பின்பு;பொடியொடும் கெழீஇய -பொடியுடன் கலந்து ஒன்றாயின.

     அன்றே - ஈற்றசை; தீண்டாமுன்னம் தகர்ந்து கீண்டன - மிகையுயர்வு
நவிற்சியணி.  கீண்டன - கிழிந்தன, உடைந்தன, 'தகர்ந்து கீண்டன' என்பதைக்
கீண்டு தகர்ந்தன எனப் பிரித்துக் கூட்டிப் பிளந்து உடைந்தன எனவும்
பொருள் கொள்ளலாம்.  பிளப்பது முதலில் தகர்வதுபின்னால்.           83

4352.'அந்நிலை கண்ட, திண் தோள்
      அரிக் குலத்து அனிகம் அம்மா!
எந்நிலை நின்றது என்கேன்? யாண்டுப்
      புக்கு ஒளித்தது என்கேன்?
இந் நிலை கண்ட அன்னை,
      ஏந்து இழை ஆயத்தோடு,
மின் நிலை வில்லினானை வழி
      எதிர் விலக்கி நின்றாள்.