ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி;மற்றும் -மேலும்;தெரிகின்ற சினத்தீப் பொங்க -வெளிப்படுகின்ற கோபத் தீயானது கொதித்தெழு;செருச் செய்வான் -(இலக்குவனோடு) போர் செய்யும் பொருட்டு;செருக்கி நின்றார்-செருக்குக் கொண்டு நின்றார்கள். வானர வீரர்கள் நகரவாயிலின் பொற் கதவுகளைத் தாளிட்டு அவற்றின் அருகில் பல் சிறு குன்றுகளை அடுக்கிவைத்த செய்தி முன் கூறப்பட்டது. (4301) அதனை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கிறான். வானைப் பொருகின்ற நகர வாயில் - உயர்வுநவிற்சியணி. 82 | 4351. | 'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால் தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு வடக்குச் செல்ல நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும், கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே. |
ஆண்தகை -ஆடவருள் சிறந்தவனான இலக்குவன்;அதனை நோக்கி -வானரர்களின் அந்தச் செயலைப் பார்த்து;அம் கமல மலர்த் தாளால் தீண்டினன் -அழகிய செந்தாமரை மலர் போன்ற தனது காலால் (அடைத்த வாயில் கதவை) உதைத்தான்;தீண்டாமுன்னம் -(அத்திருவடி) படுவதற்கு முன்பே;தெற்கொடு வடக்குச் செல்ல -தென்வடலாகப் பரவி;நீண்ட கல் மதிலும் -நீண்டுள்ள கல்லால் ஆகிய மதில்களும்;கொற்ற வாயிலும் - வெற்றி பொருந்திய நகரவாயிலும்;நிரைத்த குன்றும் -வரிசையாக அடுக்கி வைத்த குன்றுகளும்;தகர்ந்து கீண்டன -உடைந்து சிதறினவாகி;பின்னை - பின்பு;பொடியொடும் கெழீஇய -பொடியுடன் கலந்து ஒன்றாயின. அன்றே - ஈற்றசை; தீண்டாமுன்னம் தகர்ந்து கீண்டன - மிகையுயர்வு நவிற்சியணி. கீண்டன - கிழிந்தன, உடைந்தன, 'தகர்ந்து கீண்டன' என்பதைக் கீண்டு தகர்ந்தன எனப் பிரித்துக் கூட்டிப் பிளந்து உடைந்தன எனவும் பொருள் கொள்ளலாம். பிளப்பது முதலில் தகர்வதுபின்னால். 83 | 4352. | 'அந்நிலை கண்ட, திண் தோள் அரிக் குலத்து அனிகம் அம்மா! எந்நிலை நின்றது என்கேன்? யாண்டுப் புக்கு ஒளித்தது என்கேன்? இந் நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தோடு, மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள். |
|