பக்கம் எண் :

466கிட்கிந்தா காண்டம்

     அந் நிலை கண்ட -அவ்வாறு (இலக்குவனால் நேர்ந்த) நிலை
மையைப் பார்த்த;திண்தோள் அரிக் குலத்து அனிகம் -வலிய தோள்
களையுடைய வானர சேனை;எந் நிலை நின்றது என்கேன் -எந்த
நிலைமையில் இருந்ததென்று சொல்வேன்? யாண்டுப் புக்கு -எந்த இடத்தில்
புகுந்து;ஒளித்தது என்கேன் -பதுங்கியது என்று சொல்வேன்;இந் நிலை
கண்ட அன்னை -
(குரக்குச் சேனையின்) இத்தகைய நிலைமையை நேரிலே
பார்த்த (என்) தாயான தாரை;ஏந்து இழை ஆயத்தோடு -சிறந்த
அணிகளை அணிந்த மகளிர் கூட்டத்துடனே;மீன் நிலை வில்லினானை -
மின்னல் போன்று ஒளிரும் வில்லைத் தாங்கிய இலக்குவனை;வழி எதிர்
விலக்கி நின்றாள் -
வழியிலே எதிரே சென்று வழி மறித்து நின்றாள்.

     அம்மா - வியப்பிடைச்சொல்.  இலக்குவனது திருவடி பட்ட அளவில்
வாயிற் கதவு முதலியன பொடியாய்விட்டதைக் கண்ட வானரங்கள் அஞ்சி,
உயிர் தப்பிக் கலங்கிப் போனதிசை தெரியாமல் ஓடிப் போயின; அப்போது
இலக்குவன் சினத்தோடு வர, அவனை மகளிர் கூட்டத்தோடு தாரை எதிர்
கொண்டாள் என்பது.  அனிகம் -சேனை; அனீகம் என்ற வடசொல்லின் திரிபு.
மின் நிலைவில் - நிலைத்தல் என்றும் இல்லாத மின்னல் வில்லிடம் நிலைத்து
நின்றது என்பது நயம்.                                          84

4353.'மங்கையர் மேனி நோக்கான்,
      மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப்
      புகல்கிலன்; பொருமி நின்றான்;
நங்கையும், இனிது கூறி,
      ''நாயக! நடந்தது என்னோ,
எங்கள்பால்?'' என்னச் சொன்னாள்;
      அண்ணலும் இனைய சொன்னான்.

     மைந்தனும் -வீரனான இலக்குவனும்;மங்கையர் மேனி நோக்கான்-
(இவ்வாறு வழியில் நின்ற தாரை முதலிய) பெண்களின் உரு வத்தை
நிமிர்ந்தும் பாராதவனாய்;மனத்து வந்து பொங்கிய -தன் மனத்திலே
எழுந்து பொங்கி நின்ற;சீற்றம் பற்றிப் புகல்கிலன் -சினத்தால் ஒன்றும்
சொல்ல மாட்டாதவனாய்;பொருமி நின்றான் -விம்மி நின்றான்;
நங்கையும்-பெண்களில் சிறந்தவளான (எனது தாயாகிய) தாரையும்;இனிது
கூறி -
(இலக்குவனது கோபம் தணியுமாறு) இனிய சொற்களைச் சொல்லி
(அவனைப்பார்த்து);நாயக-'தலைவனே! எங்கள்பால் நடந்தது என்னோ-
(நீஇராமனை விட்டுப் பிரிந்து) எங்களிடம் வந்தது எதற்காக?'என்னச்
சொன்னாள் -
என்று கேட்டாள்;அண்ணலும் -இளைவனான இலக்குவனும்;
இனைய சொன்னான் -
வந்த காரணத்தைக் கூறினான்.

     மங்கையர் மேனி நோக்கான் - அயல் மாதரைக் கண்ணெடுத்துப் பாராத
நோன்புடையவன் இலக்குவன் என்பது அறியப்படும்.                   85