சொற்றலும் -(அவ்வாறு அங்கதன்) சொன்னவுடனே;அருக்கன் தோன்றல் -சூரியன் மகனான சுக்கிரீவன்;சொல்லுவான் -(பின்வருமாறு) சொல்லத் தொடங்கினான்;அனையவர் சினத்தின் நேர்ந்தால் -'அந்த இராமலக்குவர் கோபம் கொண்டு எதிர்த்து வந்தால்;மண்ணில் விண்ணில் - இந்த நிலவுலகத்திலோ வானுலகத்திலோ; நிற்க உரியார்கள் யாவர் - அவர்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள்யார்?விற்கு உரியார் -வில் வீரராகிய அந்த இலக்குவன்;இத் தன்மை வெகுளியின் -இவ்வாறு கோபத்துடன்;விரைவின் எய்த -விரைந்து வரும்படியாக;எற்கு உரையாது -(அதனை) எனக்குத் தெரிவிக்காமல்;நீர் ஈது -நீங்கள் இவ்வாறு; இயற்றியது என்கொல் -செய்தது என்ன காரணம் பற்றி?' என்றான் - என்று (அங்கதனை) வினவினான். எவ்வுலகத்திலும் ஈடில்லாத மகாவீரர் இராமலக்குவர் என்பதை அறியாமல் வாயில் அடைத்து இலக்குவனோடு போர் செய்ய நின்றதும், அந்த இலக்குவன் பெருங்சினத்தோடு வந்தபோது தனக்கு முன்னமே தெரிவியாதிருந்ததும் தவறு என்று சுக்கிரீவன் குறிப்பித்தான் என்பது. ஈது இயற்றியது - கதவடைத்துக் கற்கள் அடுக்கியது முதலான செயல்களைக்குறிக்கும். 87 அங்கதன் மறுமொழி | 4356. | உணர்த்தினேன்முன்னர்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்; புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைக்கப் போனேன்; இணர்த் தொகை ஈன்ற பொன் - தார் எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்! கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்' என்றான். |
இணர்த் தொகை ஈன்ற -பூங்கொத்தின் தொகுதி கொண்டு தொடுக்கப்பட்ட;பொன்தார் -அழகிய மாலையை அணிந்த;எறுழ் வலித் தடந்தோள் எந்தாய் -மிக்க வலிமை பொருந்திய பெரிய தோள் களையுடைய என் தந்தையே!முன்னர் உணர்த்தினேன் -(இலக்குவன் வருகையை உனக்கு) முன்னமே தெரிவித்தேன்; (ஆனால் அப்பொழுது);நீ உணர்வின் தீர்ந்தாய் -நீ உணர்வு மயங்கியிருந்தாய்;அஃது உணர்ந்திலை -(அதனால் நான் சொன்ன) அதனைத் தெரிந்து கொண்டாயில்லை; புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி -(ஆகவே) நான் செய்யக் கூடியது வேறு ஒன்றும் இல்லாததை உணர்ந்து;மாருதிக்கு உரைக்கப் போனேன் - அனுமனுக்குச் சொல்லப் போனேன்;கணத்திடை -ஒரு நெடிப் பொழுதிற்குள்;அவனை -அந்த இலக்குவனை;நீயும் காணுதல் -நீயும் சென்று பார்ப்பது;கருமம் என்றான் - |