பக்கம் எண் :

468கிட்கிந்தா காண்டம்

     சொற்றலும் -(அவ்வாறு அங்கதன்) சொன்னவுடனே;அருக்கன்
தோன்றல் -
சூரியன் மகனான சுக்கிரீவன்;சொல்லுவான் -(பின்வருமாறு)
சொல்லத் தொடங்கினான்;அனையவர் சினத்தின் நேர்ந்தால் -'அந்த
இராமலக்குவர் கோபம் கொண்டு எதிர்த்து வந்தால்;மண்ணில் விண்ணில் -
இந்த நிலவுலகத்திலோ வானுலகத்திலோ; நிற்க உரியார்கள் யாவர் -
அவர்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள்யார்?விற்கு உரியார் -வில்
வீரராகிய அந்த இலக்குவன்;இத் தன்மை வெகுளியின் -இவ்வாறு
கோபத்துடன்;விரைவின் எய்த -விரைந்து வரும்படியாக;எற்கு உரையாது
-
(அதனை) எனக்குத் தெரிவிக்காமல்;நீர் ஈது -நீங்கள் இவ்வாறு;
இயற்றியது என்கொல் -
செய்தது என்ன காரணம் பற்றி?' என்றான் -
என்று (அங்கதனை) வினவினான்.

     எவ்வுலகத்திலும் ஈடில்லாத மகாவீரர் இராமலக்குவர் என்பதை
அறியாமல் வாயில் அடைத்து இலக்குவனோடு போர் செய்ய நின்றதும், அந்த
இலக்குவன் பெருங்சினத்தோடு வந்தபோது தனக்கு முன்னமே
தெரிவியாதிருந்ததும் தவறு என்று சுக்கிரீவன் குறிப்பித்தான் என்பது.

     ஈது இயற்றியது - கதவடைத்துக் கற்கள் அடுக்கியது முதலான
செயல்களைக்குறிக்கும்.                                          87

அங்கதன் மறுமொழி

4356.உணர்த்தினேன்முன்னர்; நீ அஃது
      உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி,
      மாருதிக்கு உரைக்கப் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன் - தார்
      எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும்
      காணுதல் கருமம்' என்றான்.

     இணர்த் தொகை ஈன்ற -பூங்கொத்தின் தொகுதி கொண்டு
தொடுக்கப்பட்ட;பொன்தார் -அழகிய மாலையை அணிந்த;எறுழ் வலித்
தடந்தோள் எந்தாய் -
மிக்க வலிமை பொருந்திய பெரிய தோள்
களையுடைய என் தந்தையே!முன்னர் உணர்த்தினேன் -(இலக்குவன்
வருகையை உனக்கு) முன்னமே தெரிவித்தேன்; (ஆனால் அப்பொழுது);நீ
உணர்வின் தீர்ந்தாய் -
நீ உணர்வு மயங்கியிருந்தாய்;அஃது உணர்ந்திலை
-
(அதனால் நான் சொன்ன) அதனைத் தெரிந்து கொண்டாயில்லை;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி -
(ஆகவே) நான் செய்யக் கூடியது
வேறு ஒன்றும் இல்லாததை உணர்ந்து;மாருதிக்கு உரைக்கப் போனேன் -
அனுமனுக்குச் சொல்லப் போனேன்;கணத்திடை -ஒரு நெடிப்
பொழுதிற்குள்;அவனை -அந்த இலக்குவனை;நீயும் காணுதல் -நீயும்
சென்று பார்ப்பது;கருமம் என்றான் -