ஆம் - வானர குலத்துப் பிறந்த எங்களைப் போன்றவர்க்கே பொருந்தும்; எனா -என்று கூறி;மேல்நிலை அழிந்து -உடம்பு நிலை குலைந்து;உயிர் விம்மினான் -உயிர் வருந்தினான். இலக்குவன் சொற்களைக் கேட்ட சுக்கிரீவன் ஆற்றாது உடல்தளர்ந்து உயிர் வருந்தினான் என்பது. மானவத் தலைமகன் - சான்றோர் தலைவன் எனினுமாம். மேல் என்பது புறவுடலாம்; உடல் எழில் குலைதலும் மனம் நோதலும் ஆகும். மேல் என்னும் சொல் இன்னும் தென்தமிழகத்தில் உடல் என்ற பொருளில் வழங்குகிறது. தென்தமிழகத்தில் மேலுக்குக் குளிச்சிட்டு வரேன் என்று பேசுதல்கண்கூடு. 116 அனுமனைச் சேனையுடன் வருமாறு ஏவிச் சுக்கிரீவன் இராமனிடம்செல்லுதல் 4385. | எழுந்தனன் பொருக்கென, இரவி காண்முளை; விழுந்த கண்ணீரினன், வெறுத்த வாழ்வினன், அழிந்த அயர் சிந்தையன், அனுமற்கு, ஆண்டு, ஒன்று மொழிந்தனன், வரன்முறை போதல் முன்னுவான். |
இரவி கான்முனை -சூரிய குமாரனான சுக்கிரீவன்;பொருக்கென எழுந்தனன் -விரைவாக எழுந்தான்;விழுந்த கண் நீரினன் -பெருகும் கண்ணீரையுடையவனும்;வெறுத்த வாழ்வினன் -செல்வ வாழ்க்கையை வெறுத்தவனும்;அழிந்து அயர் சிந்தையன்- வருந்தித் தளரும் மனமுடையவனுமாகி;வரன் முறை போதல் முன்னுவான் -இராமனிடம் முறைப்படி செல்ல எண்ணியவனாய்;ஆண்டு -அப்பொழுது;அனுமற்கு - அனுமனிடம்;ஒன்று மொழிந்தனன் -ஒரு சொல் சொன்னான். கான் முளை - ஒரு வம்சத்தில் தோன்றியவன். கால் - வமிசம். விழுந்த கண்ணீர், வெறுத்த வாழ்வு என்று எச்சங்களையடுக்கியதால் சுக்கிரீவன் விழிகளில் பிறரின் துயரம் கண்டு பொறாததால் தானாகப் பெருகிய கண்ணீரும், உண்மையாகவே வாழ்வில் ஏற்பட்ட வருத்தமும் கண்டு தெளியலாம். 117 4386. | 'போயின தூதரின் புகுதும் சேனையை, நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என, ஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா, நாயகன் இருந்துழிக் கடிது நண்ணினான் |
நெறி வலோய் -(சுக்கிரீவன் அனுமனைப் பார்த்து) நீதி நெறிகளில் வல்லவனே;போயின தூதரின் -(முன்பு கட்டளையிட்ட படி) |