பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 487

சென்றுள்ள தூதர்களோடு;புகுதும் சேனையை -இனி வரும் வானர
சேனையை;நீ உடன் கொணருதி -நீ உன்னோடு அழைத்து வருக;என -
எனவும்; ஈண்டு இருத்தி - (அதுவரை நீ) இங்கேயே இருப்பாய்; எனா -
எனவும்;அனுமனை ஏயினன் -அனுமனுக்குக் கட்டளை யிட்டவனாய்;
நாயகன் இருந்துழி -
தலைவனான இராமன் தங்கியிருந்த இடத்திற்கு;கடிது
நண்ணினான் -
விரைந்து போகலானான்.

     தூதரின் - உருபு மயக்கம்.  இருந்த உழி என்பது இருந்துழி எனத்
தொக்கு வந்தது.  ஏயினன் - முற்றெச்சம்.                           118

சுக்கிரீவன் இராமனை அடைந்து தொழுதல்

4387. அங்கதன் உடன் செல,
      அரிகள் முன் செல,
மங்கையர் உள்ளமும் வழியும்
      பின் செல,
சங்கை இல் இலக்குவன் -
      தழுவி, தம்முன்னின்,
செங் கதிரோன் மகன்
      கடிது சென்றனன்.  *

     செங்கதிரோன் மகன் -சிவந்த ஒளிக்கற்றைகளையுடைய சூரியன்
மகனான சுக்கிரீவன்;சங்கை இல் -எப் பொருளிலும் ஐயம் திரிபு இல்லாத
(தூய மனமுடைய);இலக்குவன் தழுவி -இலக்குவனைத் தழுவிக் கொண்டு;
அங்கதன் உடன்செல -
அங்கதன் தன்னுடன் வர வும்;அரிகள் முன் செல
-
வானரங்கள் முன்னே செல்லவும்;மங்கையர் உள்ளமும் -(அன்புள்ள)
வானர மகளிரின் மனமும் பின் தொடர்ந்து வரவும்;வழியும் பின் செல -
கடந்தவழிகள் பின்னே தங்கி விடவும்;தம்முனின் -தமையனான
இராமனிடம்;கடிது சென்றனன் -விரைந்து சென்றான்.

     சுக்கிரீவனுடைய காதலுக்கு உரியர் ஆகலின் மகளிர் மனம் அவன் பின்
சென்றது என்றார்.  பின்செல: இரட்டுற மொழிதல் பின் தங்க பின்தொடர
என்னும் இருபொருள் தருதலால்.  தம்முன்: இராமனால் தம்பியாகக்
கருதப்பட்டவனாகலின் தம்முன் என்றார்.  அரசனுக்கு முன்பு வீரர்கள்
செல்வது மரபாதலின் 'அரிகள் முன்செல' என்றார்.                    119

4388. ஒன்பதினாயிர கோடி யூகம், தன்
முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற,
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற,
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில்,