பக்கம் எண் :

488கிட்கிந்தா காண்டம்

     ஒன்பதினாயிர கோடி யூகம் -ஒன்பதினாயிரங் கோடிக் குரக்குச்
சேனைகள்;தன் முன்செல பின்செல மருங்க மொய்ப்புற -தனக்கு
முன்னும் பின்னும் இருபக்கமும் நெருங்கி வரவும்;மன் பெருங் கிளைஞரும்
-
மிகச் சிறந்த உறவினர்களாகிய வானரங்களும்;மருங்கு சுற்றுற -அருகில்
சூழ்ந்து வரவும்;மின் பொரு பூணினான் -மின்னல் போன்ற ஒளி விடுகின்ற
அணிகளை அணிந்த சுக்கிரீவன்;செல்லும் வேலையில் -(இராமன் இருக்கும்
இடத்திற்குப்) போகும் சமயத்தில். . .

     பின்செல மருங்கு மொய்ப்புற என்ற சொற்போக்கினால் சுக்கிரீவனுடன்
சென்ற பெரும் பரிவாரத்தின் இயல்பு புலனாகும்.  மருங்கு - பக்கம், மேல்
யூகம் - குரக்குப் படை.                                         120

4389.கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே.

     கொடி வனம் மிடைந்தன - கொடிகளின் தொகுதிகள் அடர்ந்து
நிறைந்தன;குமுறும் பேரியின் -முழங்குகின்ற பேரிகைக் கருவிகளின்;
இடிவனம் மிடைந்தன
- இடி போன்ற ஒலித் தொகுதிகள் நிறைந்தன;
பணிலம் ஏங்கின -
சங்குகள் ஒலித்தன;தயங்கு பூண் ஒளி -விளங்கு
கின்ற அணிகளின் ஒளியாகிய;தடி வனம் மிடைந்தன -மின்னலின்
தொகுதிகள் நிறைந்தன;பொடி வனம் எழுந்தன -(பூமியிலிருந்து) புழுதித்
தொகுதிகள் கிளம்பின;வானம் போர்த்த -இவையெல்லாம் வானத்தை
அளாவி மூடின.

     வனம் - இங்கே தொகுதி, மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது.

     மிடைந்தன என்ற ஒரு சொல் பொருளில் பல முறை வந்தது.

     தடி - மின்னல்; தடித் என்ற வடசொல்லின் விகாரம் என்பர்.       121

4390.பொன்னினின், முத்தினின், புனை
      மென் தூசினின்,
மின்னின மணியினின்,
      பளிங்கின், வெள்ளியின்,
பின்னின; விசும்பினும்
      பெரிய; பெட்புறத்
துன்னின, சிவிகை; வெண்
      கவிகை சுற்றின.

     பொன்னினின் -பொன்னாலும்;முத்தினின் -முத்துக்களாலும்;புனை
மெல்தூசினின் -
அழகிய மெல்லிய ஆடைகளாலும்;