புழுதி;விண் புக -ஆகாயத்திற்குச் செல்லும்படி;பதுமுகன் என்பவன் - பதுமுகன் என்னும் தலைவன்;புகுந்தான் -வந்துசேர்ந்தான். ஏழின் ஏழு - பண்புத் தொகை: ஏழினால் பெருக்கிய ஏழு (நாற்பத்தொன்பது). உம்மைத் தொகையாகக் கொள்ளின் ஏழும் ஏழும் - ஏழொடு சேர்ந்த ஏழு - (பதினான்கு) எனப் பொருள்படும். 17 4424. | ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் தாழும் காலத்தும், தாழ்வு இலாத் தட வரைக் குலங்கள் சூழும் தோற்றத்த, வலி கொள் தொள்ளாயிரக்கோடிப் பாழி வெம் புயத்து அரியொடும், - இடபனும் - படர்ந்தான். * |
இடபனும் -இடபன் என்னும் வீரனும்;ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற -பதினான்கு என்று சொல்லப்பட்ட;உலகங்கள் எவையும் - எல்லா உலகங்களும்;தாழும் காலத்தும் -அழிகின்ற ஊழிக் காலத்திலும்; தாழ்வு இலா -அழிவில்லாத;தடவரைக் குலங்கள்- பெரிய மலைகளின் தொகுதிகள்;சூழும் தோற்றத்த - சூழ்ந்திருப்பது போன்ற தோற்றமுடையனவான;வலி கொள் -வலிமையைக் கொண்டுள்ள;பாழி வெம் புயத்து -வன்மை மிக்க கொடிய தோள்களோடு கூடிய; தொள்ளாயிரம் கோடி அரியொடும் -தொள்ளாயிரங் கோடி என்று கணக்கிட்ட வானர சேனையோடும்;படர்ந்தான் -வந்து சேர்ந்தான். உலகம் யாவும் அழியும் பிரளய காலத்திலும் அழியாது நிற்கும் மலைகள் இருப்பின், அம் மலைகளே இந்த வானர சேனைக்கு ஒப்பாகும் என்பது - இல் பொருளுவமையணி. 18 4425. | தீர்க்கபாதனும், வினதனும், சரபனும், - திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்தென மைம் முகத்து அனிகம் ஆர்க்கும் எண்ண அருக் கோடி கொண்டு, அண்டமும் புறமும் போர்க்கும் பூமியில் மறைதர, - முறையினின் புகுந்தார். * |
தீர்க்க பாதனும் -தீர்க்க பாதனும்;வினதனும் சரபனும் -வினதனும் சரபனும்;திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்து என -அலையெறிகின்ற பெரிய கரிய கடலைக் காட்டிலும் பெருந் தோற்றத்தையுடையனவான; |