| மையல் சிந்தையால் அந்தகன் மறுக்குற்று மயங்க, - தெய்வத் தச்சன் மெய்த் திரு நெடுங்காதலன் - சேர்ந்தான். |
தெய்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் -தேவ சிற்பியாகிய விசுவகர்மாவின் பிரதியுருவே எனத்தக்க அழகிய உயர்நத் மகனாகிய நளன் என்பவன்;தேவரும் -தேவர்களும்;என்கொலோ முடிவு -இப் படையின் எல்லையாதோ;என்பது எண்ண -என்று கருதும்படியாக;அந்தகன் மையல் சிந்தையால் -யமனும் இதைக் கண்டதனாலாகிய மயக்கம் கொண்ட மனத்தால்;மயக்குற்று மயங்க -கலங்கித் திகைக்கவும்;நொய்தின் கூடிய - விரைவில் திரண்ட;நூறாயிர கோடி சேனை எய்த -இலட்சக் கோடிக் கணக்கான வானர சேனை தன்னோடு வர;சேர்ந்தான் -வந்தடைந்தான். அந்தகன்: உயிர்களுக்கு அந்தத்தைச் செய்பவனென யமனுக்குக் காரணக் குறி. நளன்: தெய்வத் தச்சனான விசுவகர்மாவின் மகனாய்ப் பிறந்த ஒரு வானர வீரன்; தன் கையால நீரில் எதைப் போட்டாலும் மிதக்கும்படி வரம் பெற்றவன். திரு நெடு என்றதனால் உடல்வனப்பும் உயரமும் குறிக்கப் பெற்றன. 21 4428. | கும்பனும், குலச் சங்கனும், முதலினர், குரங்கின் தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை, இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது, இராகவன் ஆவத்து அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்பு அரிது அளவே. |
கும்பனும் -கும்பன் என்பவனும்;குலச் சங்கனும் -சிறந்த சங் கன் என்னும் வீரனும்;முதலினர் -முதலானவர்களாகிய;தம் பெருங் குரங்கின் படைத்தலைவர்கள் -தம்முடைய பெரிய வானர சேனைத் தலைவர்கள்; தரவந்த -தம்முடன் திரட்டிக் கொண்டு வந்த;தானை -வானர சேனையானது;இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது -இவ்வுலக மக்களாலும் கணக்கிட முடியாதது;இராகவன் ஆவத்து அம்பு என்னும் -இராமனின் அம்பறாத் தூணியிலுள்ள அம்புகளின்;துணைக்கு உரிய -அளவாமென்று சொல்லத்தக்க அளவுடையது (அல்லாமல்);அளவு மற்று உரைப்பரிது - அந்தப் படையின் அளவைப் பற்றி வேறு எவ்வகையிலும் சொல்லுவது அரியது. இராமனது அம்புப் புட்டிலில் அம்புகள் அளவில்லாது நிறைந்திருப்பது போலக் கும்பன், சங்கன் ஆகியோரின் சேனைகளிலும் வானரங்கள் அளவற்று நிறைந்திருந்தன. ஆவம் - அம்புப் புட்டில், அம்பறாத்தூணி. 22 |