வல்லமையுள்ளவர்களும்;மாறு இல் கொற்றவன் -இணையற்ற தங்கள் அரசனான சுக்கிரீவன்;நினைத்தன முடிக்குறும் வலியர் -எண்ணிய செயல்களை உடனே செய்து முடிக்கும் மனவுறுதியுடையவர்களுமாகிய;ஆறு பத்து எழுகோடியாம் -அறுபத்தேழு கோடி அளவுள்ள;வானரர்க்கு அதிபர் -வானர சேனைத் தலைவர்;ஊறும் இப் பெருஞ் சேனை கொண்டு -மேன்மேலும் பெருகுகின்ற இப் பெருஞ் சேனையைத் திரட்டிக் கொண்டு;எளிதின் வந்துற்றார் -எளிதில் வந்து சேர்ந்தார்கள். இவ்வாறு அறுபத்தேழுகோடி வானரப் படைத் தலைவர்கள் சுக்கிரீவனின் தூதுவர் வந்து சொல்லியவுடனே தம் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தனர் என்பது. குப்புறல் - குதித்தல். 26 படைத் தலைவர்கள் சுக்கிரீவனை வணங்குதல் 4433. | ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச் சூழும் வானரப் படையொடு, அவ் வீரரும் துவன்றி, 'ஆழி மா பரித் தேரவன் காதலன் அடிகள் வாழி! வாழி!' என்று உரைத்து, அலர் தூவினா, வணங்கி. * |
அவ்வீரரும் -அந்த வானரப் படைத் தலைவர்களும்;ஏழு மா கடல் பரப்பினும் -ஏழு பெரிய கடல்களின் பரப்பளவைக் காட்டிலும்;பரப்பு என இசைப்ப -விரிந்துள்ளது என்று கூறுமாறு;சூழும் வானரப் படையொடு - சூழ்ந்துள்ள வானர சேனையுடனே;துவன்றி -நெருங்கிவந்து;ஆழி மா பரித்தேரவன் காதலன் -ஒற்றைச் சக்கரத்தையும் சிறந்த குதிரைகளையுமுடைய தேரைச் செலுத்துபவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவனுடைய;அடிகள் வாழி வாழி என்று உரைத்து -திருவடிகள் வாழ்க வாழ்கவென வாழ்த்தி;வணங்கி -வழிபட்டு;அலர் தூவினர் - மலர்களைத் தூவினார்கள். சூரியனது தேர், காலத்தின் வடிவமான ஒற்றைச் சக்கரத்தையும் ஏழு குதிரைகளையும் உடையது என்பது நூற் கொள்கை. வாழி வாழி - அடுக்கு அன்பின் மிகுதி பற்றியது. 27 இராமன் படைகளைக் காணுதல் 4434. | அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும், அருக்கன் தனையன், நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்; |
|